Saturday 29 December 2012

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன?; carbon dioxide can really destroy the world (part-2) - varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், உலகை அச்சுருத்திக்கொண்டிருக்கும் குளோபல் வார்மிங் பற்றிய எனது பதிவின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தில் புவி தனது மேற்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறது (has been called as Greenhouse Effect) என்பது பற்றி விரிவாக எழுதியிருந்தேன், அதோடு புவி வெப்பமடைதல் அல்லது புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் (Global Warming) என்றால் என்ன என்பது பற்றியும், அது சார்ந்த அடிப்படைத் தகவல்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருந்தேன், முதல் பாகத்தை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு, இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்!

12/29/2012 01:06:00 pm by MARI The Great · 71

Thursday 20 December 2012

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழியக்காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-1); கிரீன்ஹவுஸ் விளைவு என்பது என்ன? carbon dioxide can really destroy the world by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், நெருங்கிவரும் டிசம்பர் 21, 2012 நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ உலக அழிவு பற்றி நம் அனைவரையும் அதிகம் சிந்திக்கவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது! இதற்க்கு முன்பும் பலமுறை உலக அழிவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இப்போது போல் எப்போதும் உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை என்பதே உண்மை! இந்தமுறை உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்கு காரணம் மாயன் இன மக்களும் அவர்களது காலண்டரும்தான் என்றால் மிகையில்லை! உண்மையில் டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியாவிட்டாலும் கூட 2100-ல் உலகம் அழியும் நிகழ்வு துவங்கிவிடும் என்றால் “இதென்ன புதுப் பீதீ” என்பீர்கள்தானே நீங்கள்? ஆனால் இதனை உலகின் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் உருதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா? தாவரங்கள் உட்பட புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் அடியோடு அழிந்துபோகும் அந்த உலக அழிவிற்கு காரணமாக இருக்கப்போவது கார்பன்டை ஆக்ஸைடு (Carbon Dioxide, CO2) என்ற கரியமிலவாயு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே?

12/20/2012 11:24:00 am by MARI The Great · 56

Monday 24 September 2012

சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்; ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?; how do CFC's depleting Ozone Layer by Varalatru Suvadugal


அனைவருக்கும் வணக்கம், (வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின் (CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின் வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம், முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது! ஓசோன் படலம் என்றதுமே நம் நினைவில் வருவது..., வீட்டில் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ்ஜிம் (Fridge) அதுவெளியிடும் குளோரோ ஃபுளோரோ கார்பனும் (Chlorofluorocarbons) அதனால் ஓசோனில் ஏற்பட்ட துளையும்தான் (Ozone Depletion) என்றால் மிகையில்லை! வீட்டிற்குள் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ் எப்படி விண்வெளியில் உள்ள ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் ஓசோன் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 

9/24/2012 12:02:00 pm by MARI The Great · 135

Thursday 13 September 2012

உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்; environmental degradation by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது! புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது! அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும் என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள்! ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா? வாருங்கள் இன்றைய பதிவினூடாக இதைப்பற்றி அலசுவோம்! 

9/13/2012 11:30:00 am by MARI The Great · 106

Tuesday 28 August 2012

ரெண்டாவது உயிர்க்கோளம் ஐ மீன் இரண்டாவது பூமி (புவி); Biosphere 2 by Varalatru Suvadugal


அனைவருக்கும் வணக்கம், (நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி நாம்தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய எனது முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று தவறாமல் வாசிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்) அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் புகை, அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான ரசாயனங்களின் பயன்பாடுகள் ஆகியவற்றால் இன்று நாம் நமது சுற்றுப்புறத்தை நம்மால் இயன்ற அளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோம்! அதன் விளைவுகளை கண்கூடாக பார்த்தபிறகு மீண்டும் பழையதுபோலவே மாசுபடுத்தப்படாத பூமி கிடைக்காதா என்று ஏங்குகிறோம்! அப்படிப்பட்ட மாசுபடுத்தப்படாத பூமி ஒன்று உண்மையில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே? சத்தியமாக பொய்யில்லை உண்மைதான், அதுதான் இண்டாவது உயிர்க்கோளம் (Biosphere 2) என்று அழைக்கப்படும் இரண்டாவது பூமி! 

8/28/2012 01:09:00 pm by MARI The Great · 87

Thursday 2 August 2012

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு; destruction of takshashila the world first university


அனைவருக்கும் வணக்கம், உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலாவைப் பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்தப் பதிவை தொடர வேண்டுகிறேன்! தற்போது வரையிலும் எந்த நூற்றாண்டில், யாரால், எப்போது துவங்கப்பட்டது என்று உறுதியிட்டு கூற முடியாத உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலா தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டேக்ஸிலா என்ற நகரில் தோராயமாக கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து (700 BCE) இயங்கி வந்ததாக சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா நண்பர்களே! இன்றைய பதிவில் தக்சசீலா பல்கலைக்கழகம் எப்படி அழிந்து போனது என்பது பற்றிப் பார்ப்போம் வாருங்கள்! 

8/02/2012 12:12:00 pm by MARI The Great · 121

Tuesday 24 July 2012

உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University


அனைவருக்கும் வணக்கம்.., ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்! அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை தான் பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே! 

7/24/2012 12:28:00 pm by MARI The Great · 95

Thursday 19 July 2012

மை நேம் இஸ் சிட்டி..ஸ்பீடு ஒன் டெரா பைட்ஸ்..மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்; My name is City speed one terabytes memory one zettabytes


அனைவருக்கும் வணக்கம்.., தலைப்பை பார்த்து எந்திரன் சினிமா விமர்சனம் - என்று நம்பி வந்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு பதிவின் ஆரம்பத்திலேயே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்., சர்வ நிச்சயமாய் இது சினிமா விமர்சன பதிவு இல்லை.! நீங்கள் நினைக்கும் எந்த விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல (!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..! இதற்க்கு பிறகும்.., நீங்கள் இந்த பதிவை வாசித்து விடுவது என்ற திடமான மனதுடன் இருந்தால் உங்களுக்கு நிகழவிருக்கும் துயரத்திற்கு என்னால் பொறுப்பேற்க முடியாதுJ.! 

7/19/2012 11:45:00 am by MARI The Great · 75

Tuesday 19 June 2012

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation


அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், சாதாரண அறுவை சிகிச்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு சைக்கிள் ட்யூப்பை (Cycle Tube) எடுத்துக்கொள்வோம். ட்யூப் பஞ்சர் (Puncher) ஆனால் அதனை ஒட்டி சரி செய்வது சாதாரண அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அதே பஞ்சர் ஒட்டி சரி செய்ய இயலாத அளவிற்கு பெரிதாய் போய்விடும் போது அந்த ட்யூப்பையே கழட்டி தூர எறிந்துவிட்டு புதிதாக ட்யூப் மாற்றிக் கொள்ளுதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம்.

6/19/2012 05:59:00 pm by MARI The Great · 106

Thursday 14 June 2012

மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)


அனைவருக்கும் வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத முக்கிய இடத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக இந்நூலின் லத்தீன் பதிப்பான “Concessio ei data qui componere haud valet” என்ற நூலின் வாயிலாகத்தான் ஐரோப்பிய கண்டத்தில் முதன் முதலாக போலக்னா பல்கலைகழகத்தில் (University of Bologna, Italy; Founded in 1088) அறுவை சிகிச்சை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது என்றால் அந்தக்காலத்தில் இந்நூல் எத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

6/14/2012 09:30:00 am by MARI The Great · 40

Thursday 7 June 2012

அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)


அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில் இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று  தான் கூற வேண்டும். மருத்துவதிற்கென்று சில விதிமுறைகளை உருவாக்கியவரான கிரேக்கத்தை (Ancient Greece) சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates, 460 BCE – 370 BCE) பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். பொது மருத்துவத்தின் தந்தை (Father of General Medicine) என்று அழைக்கப்படும் இவரே உலகில் முதன் முதலாக உடலியல் (Physiology), உடற்கூற்றியல் (Anatomy), மருந்தியல் (Pharmacology), நரம்பியல் (Neurology) ஆகியவற்றை பற்றி தெளிவான மேம்பட்ட கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவர். 

6/07/2012 09:49:00 am by MARI The Great · 40

Saturday 2 June 2012

சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள், best quotes on the Tamil calender


அனைவருக்கும் வணக்கம்,. வலைத்தளத்தில் பதிவு போட்டு நிறைய நாள் ஆகிருச்சே நம்மை எல்லோரும் மறந்திருப்பார்களே? நாளை நிச்சயம் ஏதாவது ஒரு பதிவு போட்டாத்தான் விளையாட்டில் நாமும் இருப்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும் என்ன செய்யலாம்.., ம்ஹும் என்ன பதிவு போடலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தபோது கண்ணில் பட்டது அறையில் இருந்த அந்த காலண்டர். அட அந்த காலண்டரில் தேதிக்கு கீழே தினமும் ஏதாவது ஒரு நல்ல கருத்து இருக்குமே அதை தொகுத்து ஒரு பதிவாக போட்டால் என்ன..? என்ற சிந்தனை என் மூளையில் உதித்தது, அந்த சிந்தனையை செயலாக்கியதே இந்த பதிவு, சரி இனி கருத்துகளுக்கு செல்வோமா ..?  

6/02/2012 08:28:00 am by MARI The Great · 44

Thursday 24 May 2012

உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)


அனைவருக்கும் வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines) மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும் மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (12000 BCE) ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் இன்றைய இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான அறுவைச் சிகிச்சை துறையின் தந்தை (Father of Surgery) என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே ..! 

5/24/2012 12:12:00 pm by MARI The Great · 54

Tuesday 15 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி; History of Rocket (Part-2)

அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது. 

5/15/2012 10:40:00 am by MARI The Great · 55

Saturday 12 May 2012

25 - ஆவது பதிவு, டாப் டென் பை ஹிட்ஸ்; Top Ten by Hits


எல்லோருக்கும் வணக்கம், புதிதாய் பிறந்த நான் ஒருவழியாக உருண்டு பிரண்டு உட்கார்ந்து பின் தரையை தேய்த்து தவழ்ந்து, சுவற்றின் உதவியுடன் நின்று தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும் ஆரம்பித்து விட்டேன், ஆம் இது என்னுடைய 25 – ஆவது பதிவு. தற்போது மீண்டும் ஒருமுறை எனது முதல் பதிவையும் கடந்த இருபத்தி நான்காவது பதிவையும் வாசித்துப்பார்க்கிறேன், எனது எழுத்து நடையில் கொஞ்சம் முன்னேற்றம் எற்பட்டிருப்பது (?) புரிகிறது.

5/12/2012 09:22:00 am by MARI The Great · 40

Wednesday 9 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket


அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. 

5/09/2012 10:06:00 am by MARI The Great · 40

Monday 30 April 2012

விண்வெளி ஆய்வின் ரகசியங்கள், எதிர்காலத்தில் பெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்; Secret of Space Exploration


அனைவருக்கும் வணக்கம், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, வெட்டியாய் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நிலவுக்கு மனிதனை அனுப்புகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்வதும், ராக்கெட் விடுவதும் தேவைதானா? ஒரு பயனும் இல்லாத இப்படிப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து வீணடிப்பதைக்காட்டிலும் பசிக்கு உணவில்லாமல் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் எத்தனையோ மக்களின் வயிற்றுப் பசியை போக்குவதில் முதலில் செலவிடலாமே? இப்படிப்பட்ட கேள்வி ஒவ்வொரு முறை இஸ்ரோ வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போதெல்லாம் ஒருசாரர் மக்களால் எழுப்பப்படுகிறது. 

4/30/2012 10:05:00 am by MARI The Great · 43

Thursday 26 April 2012

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு, டூத்பேஸ்ட் பிறந்த கதை, உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate); History of Toothpaste


அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு. 

4/26/2012 01:14:00 pm by MARI The Great · 22

Saturday 21 April 2012

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா?, சரித்திரங்களை சரித்த பெண் உளவாளிகள்; Female Spy


அனைவருக்கும் வணக்கம், ஏசி அறையில் அமர்ந்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தேனீர் அருந்திக்கொண்டே செயற்கைக்கோள் வாயிலாக உலகின் எந்த நாட்டின் எல்லைப் பகுதியையும் கண்காணிக்கும் வசதிகள் இன்று உள்ளது என்றாலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உளவுப்பணி என்பது முழுக்க முழுக்க மனிதர்களின் அறிவாற்றல், துணிவு, திறமை, சாகசம் ஆகியவற்றை சார்ந்தே இருந்தது. ஏனெனில் அப்போதைய உளவாளிகளுக்கு(Spy) தற்போதுள்ள எந்த வசிதியும் கிடையாது. விஞ்ஞான சாதனங்களும் இன்றுள்ளதைப்போல அன்று கிடையாது. ஆகையால் உளவுப்பணியில் ஈடுபடும் மனிதர்களின் அறிவாற்றல் துணிவு சாகசம் ஆகியவற்றையே அக்கால உளவு நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருந்தன. 

4/21/2012 11:02:00 am by MARI The Great · 31

Tuesday 17 April 2012

நில் கவனி தவிர் - பிளாஸ்டிக்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்; Avoid using plastic products


அனைவருக்கும் வணக்கம், உலகம் முழுவதும் அன்றாடம் கொட்டப்படும் குப்பைகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை பிளாஸ்டிக் கழிவுகள் தான் என்று கழிவுகள் மேலாண்மை நிறுவனம் (Waste Management Inc) தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை சரியாக கையாள்வதில் ஏற்படும் தோல்வியே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது. கவனித்துபார்த்தீர்கள் என்றால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 95% சதவீதத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். மனிதர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு எத்தனை தூரம் பயணித்திருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று. 

4/17/2012 12:13:00 pm by MARI The Great · 26

Monday 9 April 2012

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic by varalatru suvadugal


அனைவருக்கும் வணக்கம், இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம் ..!

4/09/2012 10:52:00 am by MARI The Great · 13

Saturday 31 March 2012

புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்; The Earth

அனைவருக்கும் வணக்கம், பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு (செயற்கைக்கோள்) எட்டிய தொலைவு வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகூட புத்தகங்கள் வாயிலாக புவியை பற்றி நாம் நிறைய படித்திருந்தாலும் கூட அப்போது மதிப்பெண்களுக்காக படித்த காரணத்தினால் நம்மில் பலருக்கு பெரும்பாலான தகவல்கள் மனதில் பதிந்திருக்காது. நாம் வாழும் இந்த கிரகத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவதில் நான் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன். சரி இனி பதிவிற்கு செல்வோமா.? 

3/31/2012 11:43:00 am by MARI The Great · 38

Wednesday 21 March 2012

இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink


அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..! 

3/21/2012 11:08:00 am by MARI The Great · 27

Monday 12 March 2012

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; வரலாற்று சுவடுகள்; பெட்ரோல் உருவான வரலாறு, history of petrol


அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். 

3/12/2012 06:42:00 pm by MARI The Great · 28

Monday 5 March 2012

உணவுப்பொருட்களை வீணாக்காதீர்கள்; வரலாற்று சுவடுகள்; Don't Waste Food; varalatru suvadugal


எல்லோருக்கும் வணக்கம்., இந்தஉலகில் ஒரு மனிதன் உண்பதற்கு உணவு இல்லாமல் பசியால் இறப்பதைக்காட்டிலும் கொடுமையான விஷயம் என்று வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?. இதில் மேலும் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லையென்பதுதான்.. அப்படியென்றால் குற்றம் யாரிடத்தில் உள்ளது நண்பர்களே மனிதர்களிடத்திலா அல்லது இறைவனிடத்திலா? 

3/05/2012 11:43:00 am by MARI The Great · 14

Tuesday 28 February 2012

தோல்விகளால் துவண்டு போயிருக்கிறீர்களா உங்களுக்காக இதோ சில உற்சாக டானிக் வரிகள்; Best Quotes

எல்லோருக்கம் வணக்கம், சில தினங்களுக்கு முன்பு பின்னிரவு வேலையில் தூக்கம் வராமல் புத்தகம் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்த போது அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில நல்ல கருத்துக்கள் என்னை கவர்ந்தது, தோல்விகளால் துவண்டு கவலைகளில் ஆழ்ந்திருக்கும் நம்மில் பலருக்கு அந்தக் கருத்துக்கள் உற்சாக டானிக் வரிகளாய் அமையும் என்ற எனது நம்பிக்கையின் காரணமாக அந்த கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன். கருத்துகளுக்கு செல்வோம் வாருங்கள். 

2/28/2012 09:21:00 am by MARI The Great · 42

Saturday 25 February 2012

சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle


எல்லோருக்கும் வணக்கம், உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம். 

2/25/2012 10:42:00 am by MARI The Great · 24

Saturday 18 February 2012

உலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு, உலக அதிசயங்களின் பட்டியல் பிறந்த கதை, History of World Seven Wonders


எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியளிட்டவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்கள் பட்டியளிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,! 

2/18/2012 11:13:00 am by MARI The Great · 22

Monday 13 February 2012

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? விலங்குகளால் மனிதர்களைப்போல் பேச முடிவதில்லையே ஏன்? How do we speak?


எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களேஉதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை. 

2/13/2012 12:06:00 pm by MARI The Great · 7

Thursday 9 February 2012

சோப்பு உருவான வரலாறு, உலகின் முதல் சோப்பு கம்பெனி பியர்ஸ் (Pears), சோப்பு பிறந்த கதை; History of Soap Making, Pears the World first Soap Company


எல்லோருக்கும் வணக்கம், இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். 

2/09/2012 10:24:00 am by MARI The Great · 10

Friday 3 February 2012

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும், பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? How belly is formed?

எல்லோருக்கும் வணக்கம்மனிதர்களின் உருவ அழகையும்உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்

2/03/2012 04:28:00 pm by MARI The Great · 48

Monday 30 January 2012

மறைக்கப்பட்ட மாமேதைகள் அஷிஷுல் ஹக் மற்றும் கெம் சந்திர போஸ், இந்தியர்களே மிகத்துல்லியமான கைரேகை ஒப்பீட்டு முறையை உருவாக்கியவர்கள், கைரேகையின் வரலாறு, History of Fingerprints.


எல்லோருக்கும் வணக்கம், இதுவரை மண்ணில் பிறந்த எந்த மனிதனது கைரேகையும் இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருந்ததில்லை என்றால் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்று தானே கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியான அடையாளத்தோடு படைத்துக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் ரகசியம்., நம் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் கைரேகையை போல் இருப்பதில்லை என்ற உண்மையை முதன் முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார் தெரியுமா நண்பர்களே.., மேதைகளோ விஞ்ஞானிகளோ அல்ல மண்பாண்டங்களை செய்து விற்கும் சாதாரண குயவர்கள் தான். 

1/30/2012 10:44:00 am by MARI The Great · 15

Saturday 21 January 2012

மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the Worlds.


எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.

1/21/2012 09:37:00 am by MARI The Great · 24

Wednesday 18 January 2012

லிப்ஸ்டிக் உருவான வரலாறு, லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான், history of lipstick, indians are the first man to produce lipstick


அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். 

1/18/2012 10:40:00 am by MARI The Great · 2