Wednesday 9 May 2012

ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket


அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. 

விண்வெளி புரட்சிக்கு வித்திட்ட ராக்கெட் (Rocket) தொழில்நுட்பம் ஒரு சில ஆண்டுகளின் ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை, கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD)  ஆம் ஆண்டு தான் ராக்கெட் தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது. ஒவ்வொருவினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் இயக்கவியல் விதியை (Newton’s Law of Motion) அடிப்படையாக கொண்டுதான் ராக்கெட்டுகள் இயங்குகின்றன. நியூட்டனின் இந்த இயக்கவியல் விதிகள் வகுக்கப்பட்டதோ கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் தான் (Philosophiae Naturalis Principia Mathematica, first edition of Motion Law published in 1687) ஆனால் விண்வெளி பயணம் பற்றிய சிந்தனையும் ராக்கெட் உருவாக்கம் பற்றிய ஆய்வும் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்தே (400 BC) துவங்கிவிட்டது என்றால் ஆச்சிரியமாக இல்லை வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.


ராக்கெட் எப்படி இயங்குகின்றது என்பதற்கு ரத்தின சுருக்கமாக விளக்கம் சொல்வதானால் நாம் கழிவறையில் தண்ணீரை பீச்சியடிக்க பயன்படுத்தும் ஷோயரை (Toilet Shower) உதாரணமாக கூறலாம். ஷோயரில் நுண்துளை (Nozzle) வாயிலாக தண்ணீர் பீச்சியடிக்கப்படும் போது தண்ணீர் வெளியேறும் வேகத்திற்கு இணையான விசை ஒன்று மேல்நோக்கி செயல்பட்டு ஷோயரை மேல் நோக்கி தள்ளும், அதைப்போல ராக்கெட்டில் நுண்துளை (Nozzle) வாயிலாக அதிக அழுத்தத்தில் பீச்சியடிக்கப்படும் எரிபொருள் எரிந்து உருவாகும் அதற்க்கு இணையான எதிர்விசை மேல்நோக்கி செயல்பட்டு ராக்கெட்டை மேல்நோக்கி உந்தித்தள்ளுகிறது.

வரலாறு அறிந்த முதல் ராக்கெட் பற்றிய ஆய்வுப் பயணம் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்து (400 BC) துவங்குகிறது. கிரேக்கத்தை சேர்ந்த (Ancient Greece) பல்துறை வல்லுனரான ஆர்ஸிடஸ் (Archytas, 428 BC – 347 BC, born in Italy) என்பவர் கி.மு.375 ஆம் ஆண்டு உந்துவிசையால் இயங்கும் மரத்தால் ஆன தி பிஜியன் (The Pigeon) என்று அழைக்கப்பட்ட பறவை ஒன்றை வடிவமைத்தார். நீராவியின் உந்து விசையைகொண்டு இயங்கிய அவரது மரத்தால் ஆன பறவை கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை பறந்து அன்றைய மக்களை ஆச்சிரியத்தில் உறையச் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இவரது இந்த கண்டுபிடிப்புதான் பல புதிய சகாப்தங்களுக்கு திறவுகோலாக அமைந்தது என்றால் மிகையில்லை.


ஆர்ஸிடஸின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு எகிப்த்தை சேர்ந்த பொறியாளரான (Engineer) ஹெரோன் (எ) ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியா (Heron (e) Hero of Alexandria, 10 AD – 70 AD) என்பவர் ஏயோலிபிலி (Aeolipile) என்ற சாதனத்தை கி.பி.ஒன்றாம் நூறாண்டில் (100 AD) வடிமைத்தார். உலகின் முதல் நீராவி என்ஜின் என்று ஆதாரப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏயோலிபிலி கிட்டத்தட்ட மூடப்பட்ட பாத்திரம் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருந்தது. பாத்திரத்தின் மேற்புறம் செங்குத்தாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களை அச்சாக கொண்டு சுழலும் வகையில் உருளை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. உருளையின் எதிர் எதிர் துருவங்களில் குறுகிய துளைகளையுடைய இரண்டு எல் (L)’ வடிவ நாசில்கள் (Nozzle) இணைக்கப்பட்டிருந்தன.


பாத்திரத்திற்குள் நீரை ஊற்றி கொதிக்க வைக்கும் போது நீர் ஆவியாகி வெளியேற வாய்ப்பின்றி அழுத்தப்பட்டு குழாய்களின் வழியாக உருளையை அடைந்து பின் மிகக்குறுகிய நாசில்கள் வழியாக அதிக வேகத்துடன் வெளியேறியது. வெளியேறிய வேகத்திற்கு இணையான எதிர் விசை உருளையின் மீது செயல்பட்டு உருளையை சுழற்றச் செய்தது. எதிர் எதிர் துருவங்களில் நாசில்கள் இணைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உருளை மிக வேகமாக சுழல ஆரம்பித்தது. விளையாட்டு பொருள் போல இருந்த இந்த ஏயோலிபிலிதான் பிற்காலத்தில் நீராவி என்ஜின்கள் வடிவமைப்பதற்கு மூலகாரணமாகவும், ராக்கெட்டுகள் வடிவமைத்திட முன்னோடி சிந்தனையாகவும் இருந்தது.

இதே காலகட்டத்தில் (100 AD) சீனாவில் மதவிழாக்களின் போது பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாடும் வழக்கம் நடைமுறையில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த பட்டாசுகளை சீனர்கள் சால்ட்பெட்டர் (Saltpeter, such as potassium Nitrate), சல்பர் (Sulfur), கரித்தூள் (Charcoal Dust) ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருந்தனர். தற்செயலாக ஒரு நாள் வெடிக்காத பட்டாசு ஒன்று புகையை கக்கிக்கொண்டு முன்னோக்கி பாய்ந்து செல்ல, இது தற்செயலாக விழாக்கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சீன வேதியல் வல்லுனர்களின் கண்களில் விழ அன்றிலிருந்து துவங்கிய ஆய்வுதான் வெடிபொருளை நிரப்பிக்கொண்டு பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் (Missile).


பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சால்ட்பெட்டர், கார்பன், சல்பர் ஆகியவற்றை கொண்டு வெடிமருந்தை தயாரித்த சீன வேதியல் வல்லுனர்கள், சிறிய மூங்கில் குழாய்களில் அடைத்து அவற்றை அம்புகளின் (Arrow) முனையில் இணைத்து வில்லில் (Bow) இருந்து ஏவி இலக்குகளை தாக்கினார்கள். தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட சீன வல்லுனர்கள் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD) வெடிமருந்தின் ஒரு பகுதி ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) செய்யப்பட்டிருந்தால் வெடிமருந்து வெடிக்காமல் எரிபொருளாக செயல்பட்டு எரிந்து வாயுக்களை புகையாக வெளியேற்றம் செய்யும் என்று கண்டுபிடித்தார்கள். அவ்வாறு வெளியேற்றப்படும் வாயுக்கள் குறுகிய துளைவாயிலாக வெளியேறும் படி செய்தால் அழுத்தம் காரணமாக வாயுக்கள் வெளியேறும் வேகத்திற்கு இணையான எதிர்விசை முன்னோக்கி செயல்பட்டு ராக்கெட்டை உந்தித்தள்ளும் என்றும் கண்டுபிடித்தார்கள் அவ்வாறு நிகழ்ந்தால் ராக்கெட் தானே இயங்கி இலக்கை தாக்கும் அப்போது ராக்கெட்டை ஏவுவதற்கு வில் (Bow) தேவைப்படாது என்று அறிந்துகொண்டார்கள்.


தொடர்ந்து பத்தாம் நூற்றாண்டின் (1000 AD) இறுதியில் ராக்கெட் தனது முதல் வடிவத்தை அடைந்தது. நீளமான குச்சி ஒன்றின் முனையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட மூங்கில் துண்டு ஒன்று குச்சியுடன் இணைத்துக்கட்டப்பட்டது. ராக்கெட் பற்றவைக்கப்பட்டதும் (Ignited) எரிபொருள் எரிந்து புகையை (வாயுக்களை) வெளியேற்றி, ராக்கெட் முன்னோக்கி சீறிப்பாய்ந்து இலக்கை தாக்கியது. பத்தாம் நூற்றாண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்டாலும் கூட மெய்யாக களத்தில் 1232 ஆம் ஆண்டு மங்கோலியர்களுக்கும் (Mongol Empire) சீனர்களுக்கும் காய் பெங் பு (Kai Feng Fu) என்ற இடத்தில் நடந்த போரில் தான் முதன் முதலாக ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. சீறி பாய்ந்து வந்து தாக்கி குறிப்பிடத்தக்க அழிவுகளை ஏற்படுத்திய சீன ராக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல் மங்கோலியப்படை பின்வாங்கி தோற்றது.


இதைத்தொடர்ந்து ராக்கெட்களின் மகத்துவம் பற்றி அறிந்துகொண்ட மங்கோலியர்கள், ஓஹீடீ கான் (Ogedei Khan, 1186 – 1241) ஆட்சிக்காலத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் தெரிந்த சில சீன வல்லுனர்களை பொன் மற்றும் பெண் ஆசை காட்டி தங்கள் நாட்டிற்கு கடத்தி வந்து தங்கள் ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினார்கள். ஐரோப்பிய யூனியன் மீது தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பிய ஓஹீடீகான் அதற்க்கு முன்னோட்டமாக ஹங்கேரி (Hungary) மீது 1241 ஆம் ஆண்டு போர் தொடுத்தார். மொஹி (Battle of Mohi, 1241) என்று அழைக்கப்பட்ட ஹங்கேரியின் சஜோ நதிக்கரையில் (Sajo River, Hungary) நடந்த அந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் ராக்கெட்டுகளை பயன்படுத்தி ஹங்கேரி படையினரை தவிடுபொடியாக்கினர், இதற்க்கு பிறகுதான் ராக்கெட் என்று ஒன்று இருக்கிறது என்பது பற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு (European Union) தெரியவந்தது.


மங்கோலியர்கள் வாயிலாக மெல்ல மெல்ல ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றி 14 ஆம் நூற்றாண்டு வாக்கில் கொரியர்களுக்கும் தெரியவந்தது. தொடர்ந்து 1448 ஆம் ஆண்டு சீசங் (Sejong the Great, 1397 – 1450) மன்னரது ஆட்சிக்காலத்தில் ஜோசன் வம்சத்தை (Joseon Dynasty) சேர்ந்த ராக்கெட் வல்லுனர்கள் ஹவாஜா (Hwacha or Singijeon) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் மல்டி மிசைல் லாஞ்சர்களை (Multi Missile Launcher) வடிவமைத்திருந்தனர்.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் உலகின் அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மரத்தினாலோ அல்லது மூங்கில் துண்டுகளை கொண்டோதான் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் 1780 ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கும் மைசூர் மன்னன் ஹைதர் அலிக்கும் (Hyder Ali, 1720 – 1782; The Ruler of Kingdom of Mysore) இடையே நடந்த குண்டூர் யுத்தத்தில் (Battle of Guntur) உலகிலேயே முதன் முறையாக ஆங்கிலேய படைகள் உலோகத்தினாலான (Iron cased) ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கி பேரழிவுகளை எற்படுத்திய ராக்கெட்டுகளை கண்டு ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோன ஆங்கிலேயப்படைகள் தோற்று பின்வாங்கின.


மைசூர் மன்னன் ஹைதர் அலியின் மகனான மைசூர்புலி (Mysore Tiger) என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானால் (Tipu Sultan, 1750 – 1799) தயாரிக்கப்பட்டிருந்த உலகின் முதல் உலோக ராக்கெட் (Knows as Mysorean Rocket) கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது. 20 சென்டி மீட்டர் நீளமும் 8 சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்புக்குழல்களுக்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு நான்கு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டப்பட்டு ஏவப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் (1800 AD) உலகிலேயே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திப்புவினுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


திப்புவிடம் போரிட்டு வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் திப்புவின் அண்டை அரசர்கலான திருவிதாங்கூர் சமஸ்தானம் (Kindom of Travancore), ஹைதராபாத் நிஜாம் (Nizam of Hydrabad), மராத்தியர்கள் (Maratha Empire) ஆகியோர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு லஞ்சம் என்ற சதிவலையை பின்னி திப்புவின் அமைச்சரான மிர் சாதிக்கை (Mir Sadiq) துரோகியாக மாற்றியது, இதன் பின்னரே திப்புவை ஆங்கிலேயர்களால் வெல்லமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூரபத்மனை நினைவு கூறாமல் கந்தனின் வாழ்க்கை வரலாறை எப்படி நிறைவு செய்ய இயலாதோ அதுபோல ராக்கெட்டின் வரலாறு பற்றி குறிப்பிடும் போது திப்புவை பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அந்த வகையில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் திப்பு. ஹைதராபாத் நிஜாம் அல்லது மராத்தியர் இருவரில் யாராவது ஒருவர் திப்புவுக்கு ஆதரவாக போரிட்டிருந்தால் அட அவ்வளவு வேண்டாம் வெள்ளையர்களுடன் சேர்ந்துகொண்டு திப்புவை தாக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் வெள்ளையர்களின் சகாப்தம் அன்றே முடிவை எட்டியிருக்கும். வரலாற்றில் மகாத்மா காந்தி என்பவர் அறியப்படாமலேயே போயிருக்கக்கூடும்.

திப்பு மாவீரன் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த ராக்கெட் விஞ்ஞானியும் கூட. மேலும் பல சுவையான தகவல்களுடன் ராக்கெட் உருவான வரலாறு’ – வின் இரண்டாம் பாகம் உங்களுக்காக காத்திருக்கிறது, தொடர்ந்து இணைந்திருங்கள், பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவுசெய்துவிட்டு செல்லுங்கள், உங்கள் கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் நன்றி., வணக்கம்.!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

40 comments:

  1. ம்.ம்.. இப்போது தான் தெரிந்து கொண்டேன் ராக்கெட் ஹங்கேரி படையினரை தோற்கடித்தது என்று

    அப்போ அப்பவே ராக்கெட் இருந்துருக்குன்னு சொல்றீங்கள்

    ReplyDelete
  2. பல அறியத தகவல் தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ராக்கெட் சரித்திரம் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அபூர்வமான தகவல்களுக்கு நன்றிகள் பல! இரண்டாம் பகுதிக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  5. ராக்கெட் பற்றி பல புதிய விவரங்களை தெரிந்து கொண்டேன். இந்த பதிவை படித்து என் மகன் நான் ராக்கெட்லாம் செய்யுற படிப்பு படிக்க போறேன்ன்னு சொல்றன். அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது 'செல்வமகன்' வருங்காலத்தில் சிறந்த ராக்கெட் நிபுணராக ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!

      Delete
  6. நல்ல ஆரம்பம்... இனிதே தொடருங்கள்!!

    திப்பு சுல்தான் தான் உண்மையான 'ராஜா.. ராஜா..ராக்கெட் ராஜா' !!

    சீனர்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ராக்கெட்டைக் கண்டுபிடித்து விட்டனர். (அதை கி.பி க்கு மாற்றியது ஐரோப்பியர்களின் சதி!!). மேலும், அதற்கு முன்பே திராவிடர்கள் ஏவூர்தியின் முன்னோடியைக் கொண்டிருந்தனர்.



    (உண்மையைச் சொன்னால் நீங்க முந்திக்கிட்டீங்க!! சமயம் கிடைத்தால் பின்பொரு சமயம் விரிவாக பதிவிடுகிறேன்)

    சிறு அறிவுரை : தலைப்பு மற்றும் இணைப்பு நிரல் (சுருக்கப்பட்டது) ஆகிய இரண்டும் சேர்ந்து 130 எழுத்துகளுக்குள் வருவது போல செய்யுங்கள்! முழுமையாய் ட்வீட்ட வசதியாக இருக்கும்! அதே போல எல்லா பதிவுகளையும் திரட்டிகளில் இணைத்து விடுங்கள். அடுத்து வருபவர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கும்(தவறாக எண்ண வேண்டாம்!)

    ReplyDelete
    Replies
    1. ///உண்மையை சொன்னால் நீங்க முந்திக்கிட்டீங்க!! சமயம் கிடைத்தால் பின்பொரு சமயம் விரிவாக பதிவிடுகிறேன்///

      காத்திருக்கிறேன் சகோ, கண்டிப்பாக எழுதுங்கள் ..!

      ///தலைப்பு மற்றும் இணைப்பு நிரல் (சுருக்கப்பட்டது) ஆகிய இரண்டும் சேர்ந்து 130 எழுத்துக்குள் வருவதுபோல் செய்யுங்கள்//

      தவறுகளை சுட்டிக்காட்ட தயக்கம் வேண்டாம் சகோ, அறிவுரைகள் என்னை திருத்திக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உதவும். அடுத்த முறை அத்தனை அறிவுரைகளையும் கவனத்தில் கொள்கிறேன்

      நீண்ட நேரம் செலவழித்து கருத்துரை இட்டமைக்கும், அறிவுரை தந்தமைக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
  7. ராக்கெட் பற்ரிய பல தகவல்கள் அடங்கிய ஒரு முழுமையான பதிவு

    ReplyDelete
  8. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.
    http://www.googlesri.com/

    ReplyDelete
  9. நீங்கள் பீரங்கியையும் ராக்கெட்டையும் குழப்பிக்19கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.18ம் நூற்றாண்டு வரை வால்,கம்பு போன்ற ஆயுதங்கள் மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில் 19ம் நூற்றாண்டில் துப்பாக்கியும்,பீரங்கியும் போரின் வெற்றியை தீர்மானிக்கும் ஆயுதங்களாக இருந்தன.இந்தியாவில் முதன் முதல் பீரங்கி உபயோகித்தவர் திப்பு சுல்தான்.ஆதாரம் ராக்கெட் காதலன் நம்ம அப்துல் கலாம்.

    நகராமல் நீளவாக்கில் தூரமாக எரிபொருள் மட்டுமே பயணிக்கும் பீரங்கியை செங்குத்தாக மாற்றி எரிபொருளோடு தானும் பயணித்த தொழில் நுட்பமே ராக்கெட்.

    பல செய்திகளை உள்ளடிக்கியிருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் பீரங்கியின் பயன்பாடு முகலாயப் பேரரசர் அக்பர் (Akbar the Great, 1542 - 1605) காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கிறது நண்பரே; for more information please visit @ http://en.wikipedia.org/wiki/Cannon

      புரிதலுக்கு நன்றி.., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!

      Delete
    2. அக்பர் அல்ல பாபர்

      Delete
  10. நான் அறியாத பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி...!!!

    ReplyDelete
  11. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    amazing article. கடினமான உழைப்புடன் வந்துள்ள பதிவு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்துக்கள்.

    @ ராஜ நடராஜன்,

    விக்கிபீடியாவில் தெளிவாக உள்ளதே சகோதரர். இந்த கட்டுரை திப்புவின் ராக்கெட் குறித்து கூறும் செய்திகள் வரலாற்று உண்மையே..

    நன்றி

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் நண்பர் ராஜ நடராஜன் அவர்களுக்கு விளக்கியமைக்கும் ..!

      Delete
  12. சகோதரர்,

    ரைட் கிளிக் ஆப்ஷனை அனுமதியுங்கள் ப்ளீஸ். பதிவில் இருந்து சில வரிகளை எடுத்து போட்டு ஷேர் செய்வதற்கு கஷ்டமாக இருக்கின்றது.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவை எழுத குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் உழைக்க வேண்டியதுள்ளது அப்படியிருக்க, காபி& பேஸ்ட் செய்வதையே தொழிலாக கொண்ட சிலர் வெகு சுலபமாக முழு பதிவையும் முன் அனுமதியின்றி காபி செய்து தங்களது தளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். அதை தடுப்பதற்காகத்தான் ரைட் கிளிக் ஆப்சனை தடுத்திருக்கிறேன், ஆனால் அது உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்ட இதயங்களை வேறு வகையில் பாதிக்கிறது என்பதை அறியும் போது வருந்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை,

      மிகவும் மனம் வருந்துகிறேன் சகோ ரைட் கிளிக் ஆப்சனை அனுமதிக்க முடியாமைக்கு ..!

      புரிதலுக்கு நன்றி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..!

      Delete
    2. ஓகே சகோதரர்...

      நோ ப்ரோப்லம். அதே நேரம் இந்த சின்ன உதவியை முடிந்தால் செய்யுங்கள். "பதினெட்டாம் நூற்றாண்டு வரையில்" என்று தொடங்கும் பத்தியை மட்டும் எனக்கு மெயில் அனுப்புங்கள். என் ஈமெயில் முகவரி aashiq.ahamed.14@gmail.com

      நன்றி

      Delete
    3. மின்னஞ்சல் செய்துவிட்டேன் சகோ, அஞ்சல் உங்களை வந்து சேர்ந்த பின், பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்வேன் ..!

      Delete
  13. ஆம் சகோதரர். மெயில் வந்துவிட்டது. மிக்க நன்றி..

    ReplyDelete
  14. நிறைய தகவல்கள். எப்படித்தான் சேகரித்தீர்களோ!! சூப்பர்.

    ReplyDelete
  15. Salaam Bro,
    Very rare historic informations.
    Thank you very much.
    Keep it up.

    ReplyDelete
  16. மிக சரியான விளக்கமான பதிவு நன்றி சகோதரா

    ReplyDelete
  17. நம்ம ஆட்கள் புராணங்களியே ராக்கெட் விட்டுட்டாங்க. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. சுவாரஸ்யமான தகவல்கள்...திப்புசுல்தான் ஒரு அரசர் விஞ்ஞானி என்று கூற முடியாது மதிநுட்பம் வாய்ந்த பொறியாளர்களை விஞ்ஞானிகளை அவர் வைத்திருந்தார்....ஊக்குவித்தார் அவர்கள் கட்டிய அனை ஒன்று எங்க ஊரில் உள்ளது அதை கட்டிய முறை மிக மிக நுட்பமானது.....

    ReplyDelete
  19. நல்லாவே பிந்தி வந்திருக்கிறேன் வரலாறு சார்.ஆனாலும் அற்புதமாய் அதிசயத்துக் கண்கள விரியப் படித்து முடித்தேன்.உங்களின் ஆர்வத்துக்கும் தேடலுக்கும் நன்றி.இத்தனை தேடலுக்கும் உங்களின் நேரத்தைச் செலவழித்தாலும் பிரயோசனம் அதிகம் !

    ReplyDelete
  20. தெளிவான வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  21. nanpare!

    mikka nantri!

    thippu patriya theriyaatha visayam arumaiyaana pakirvu!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே., வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  22. வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா., வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  23. உங்கள் பதிவில் கருத்துச்சொல்ல என்ன இருக்கிறது...அற்புதம்....அதைவிட வேறு என்ன சொல்ல....

    -வீரா

    ReplyDelete
  24. அற்புதம்.நல்ல தெரியாத தகவல்களுடன் நம் பங்கு பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. - ராஜ் குமார் (www.comicsda.com )

    ReplyDelete
  25. நன்றாக எழுதியுள்ளீர் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...