Sunday 8 January 2012

பிள்ளையார் சுழி (முதல் பதிவு)


எல்லோருக்கும் வணக்கம்,

எனது எல்லா முயற்சிகளையும் வெற்றி பெறச் செய்யும் எம்பெருமான் விநாயகப் பெருமான், எனது இந்த செயலும் (வலைத்தளத்தில் எழுதுதல்) வெற்றியடைய என்னுடன் எப்போதும் துணை நிற்பார் என்ற நம்பிக்கையுடன் எனது எழுத்தை துவங்குகிறேன்.


முதலில் எல்லோருக்கும் எமது நெஞ்சார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், பிறந்த இந்த 2012-ஆம் ஆண்டு மட்டுமல்லாது இனி பிறக்கப்போகும் எல்லா புத்தாண்டுகளும் உங்கள் வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு அனைத்து வாய்ப்புகளையும், வழிகளையும் உண்டாக்கி தந்திட வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்.

சரி வாங்க இனி பதிவுக்கு போவோம், நம் ஒவ்வொருவரின் எண்ணங்களையும், கருத்துக்களையும் மற்றும் எழுத்துக்களையும் இந்த தலைமுறையில் பதியச் செய்ய கிடைத்த வரப்பிரசாதம் இணையதளம் ஆகும் ஏனெனில் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடும் அளவிற்கு எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை ஆனால் இணையத்தில் யார் நினைத்தாலும் எதைப்பற்றியும் சுதந்திரமாக எழுத இயலும், அதுவும் தமிழிலேயே எழுத முடிவது எல்லோருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

ஆகையால் தான் தினமும் புதிதுபுதிதாய் நூற்றுக்கணக்கில் புதிய எழுத்தாளர்கள் இணையதளத்தில் உருவாகிவிடுகிறார்கள், இன்று முதல் நானும் அந்த வரிசையில் இணைந்து இயன்ற அளவில் எனது கருத்துக்களையும், படைப்புகளையும் தூய தமிழில் எழுத முனைந்துள்ளேன், பதிவுகளில் தவறு ஏதும் இருந்தால் அதனை பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுமாறு வாசகர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

-உங்கள் நண்பன்,

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

5 comments:

  1. @ ark @

    தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  2. பயணம் இனிதே தொடங்கட்டும்

    ReplyDelete
  3. @ கரூர் மணி @

    தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி..,

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...