Monday 24 September 2012

சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்; ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?; how do CFC's depleting Ozone Layer by Varalatru Suvadugal


அனைவருக்கும் வணக்கம், (வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின் (CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின் வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம், முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது! ஓசோன் படலம் என்றதுமே நம் நினைவில் வருவது..., வீட்டில் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ்ஜிம் (Fridge) அதுவெளியிடும் குளோரோ ஃபுளோரோ கார்பனும் (Chlorofluorocarbons) அதனால் ஓசோனில் ஏற்பட்ட துளையும்தான் (Ozone Depletion) என்றால் மிகையில்லை! வீட்டிற்குள் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ் எப்படி விண்வெளியில் உள்ள ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் ஓசோன் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சுவாசவாயுவாக திகழும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை (Oxygen Atoms, O) கொண்ட ஆக்ஸிஜன் வாயுக்களின் (Oxygen, O2) மற்றொரு பரிணாம வடிவம்தான் இந்த ஓசோன் (Ozone, O3).! இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட வாயு.., ஆக்ஸிஜன் என்றால் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட வாயு ஓசோன்! 1840-ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனரான கிறிஸ்டியன் ஃப்டரிச் சோன்பியன் (Christian Friedrich Schonbein, 1799 – 1868) என்பவரால் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாயுக்கள் சற்று துர்நாற்றம் வீசும் தன்மைகொண்டதாக இருந்ததால் நாற்றம் (Smell) என்று பொருள்படும் கிரேக்கமொழி சொல்லான ஓசோன் (Ozone) என்ற பெயரை இந்த வாயுக்களுக்கு சூட்டினார் ஃப்டரிச் சோன்பியன்! ஃப்டரிச்சால் இந்த வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட இவ்வாயுக்களின் உட்கட்டமைப்பு பற்றி (Structure of Ozone, which mean Ozone is 3 Oxygen Atoms) முதன் முதலாக விளக்கி கூறியவர் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஜேக்கஸ் லூயிஸ் சோரட் (Jacques Louis Soret, 1827 – 1890) என்பவர்.., என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!


ஓசோன் என்றதுமே நம்மில் பெரும்பாலானோர் நினைப்பது அது புவியின் வழிமண்டலத்திற்க்கு மேலே இருக்கும் வாயு என்று உண்மையில் நாம் சுவாசிக்கும் சுவாச மண்டலத்திலும் ஓசோன் வாயுக்கள் உண்டு! காற்றில் 0.07 PPM (Parts Per Million) என்ற அளவிற்கு கலந்திருக்கும் ஓசோன் வாயுக்கள் அதன் அடர்த்தி மற்றும் எளிதில் சிதைவடையும் தன்மை காரணமாக புவியின் மேற்பரப்பில் அதிகம் நிலைத்திருப்பதில்லை! இவை புவியின் மேற்பரப்பில் நிலைத்து நிற்காமல் இருப்பதும் ஒருவகையில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையே ஏனெனில் ஓசோன் வாயுக்களை உயிரினங்கள் நேரடியாக சுவாசிக்க நேர்ந்தால் அவைகளில் கண் எரிச்சல், தலைவலி, உணவுகுழாய் பாதிப்பு மற்றும் சுவாசகோளாறு உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது! ஓசோன் வாயுக்கள் நேரடியாக உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்தாலும் வளிமண்டலத்தை (Atmosphere) பொருத்தவரை இந்த வாயுக்கள் மட்டும் இல்லாது போனால் புவியில் இத்தனை காலம் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியே?

சராசரியாக புவியின் மேற்பரப்பிலிருந்து 17 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப்பகுதி (called as stratosphere) முழுவதும் கிட்டத்தட்ட 98% ஓசோன் வாயுக்களால் நிரப்பப்பட்டிந்தாலும் கூட புவியின் மேற்பரப்பிலிருந்து 25 முதல் 35 கிலோமீட்டர் வரையிலான வழிமண்டலபகுதியில் தான் இவ்வாயுக்களின் அடர்த்தி அதிகம், இதைத்தான் நாம் ஓசோன் படலம் (Ozone Layer) என்று அழைக்கிறோம்! பூமியில் உள்ள மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் (Ultra Violet Rays; Knows as UV) தாக்குதல்களிலிருந்து காக்கும் அதிமுக்கிய பணியை இந்த ஓசோன் மண்டலம் தான் மேற்கொண்டுவருகிறது! சூரியனிடமிருந்து வரும் கதிர்களில் கிட்டத்தட்ட 99% புறஊதாக்கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும் இந்த ஓசோன் படலம் குறித்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மனிதர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே? உண்மைதான்! பிரான்ஸ் நாட்டை சார்ந்த இயற்பியல் வல்லுனர்களான சார்லஸ் ஃபேப்ரி (Charles Fabry, 1867 – 1945) மற்றும் ஹென்றி புய்சன் (Henri Buisson, 1873 – 1944) ஆகியோரால் 1913-ஆம் ஆண்டு ஓசோன் படலம் கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ஓசோன் படலம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் மனிதகுலத்திற்கு தெரியவர ஆரம்பித்தது! சரி.. இப்போது ஓசோன் வாயுக்கள் எப்படி புறஊதாக்கதிர்களை உறிஞ்சிக்கொள்கிறது என்பது குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்!


ஓசோன் வாயுக்கள் புறஊதாக்கதிர்கள் உறிஞ்சிக்கொள்வது முழுக்க முழுக்க ஒரு வேதிவினையே! சூரியனிலிருந்து கிளம்பும் புறஊதாக்கதிர்கள் ஓசோன் படலத்தை எட்டும்போது அங்கிருக்கும் ஓசோன் வாயுக்கள் புறஊதாக்கதிர்களுடன் இணைந்து வேதிவினை புரிய ஆரம்பித்துவிடுகின்றன! வேதிவினையின் முடிவில் ஓசோன் மற்றும் புறஊதாக்கதிர்கள்...., ஆக்ஸிஜன் வாயு (O2), ஆக்ஸிஜன் அனு (O) மற்றும் வெப்ப ஆற்றலாக சிதைவுருகிறது! பொதுவாக தனிமங்கள் வாயு நிலையில் இருக்கும் போது ஒருபோதும் தனித்து நிற்ப்பதில்லை! தொடர்ந்து ஆக்ஸிஜன் அனு (O) சூரியனிடமிருந்து கிடைக்கும் மின்காந்த ஆற்றல் (Electro Magnetic Energy) உதவியுடன் புறஊதாக்கதிர்களில் இருக்கும் போட்டனை (Photon) எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவுடன் (O2) இணைந்து வேதிவினை புரிந்து மீண்டும் ஓசோன் வாயுக்களை தோற்றுவித்துவிடுகின்றன!


இவ்வாறு ஓசோன் வாயுக்கள் மீண்டும் உருப்பெறும் இந்த வேதிவினை போட்டோ-டிஸ்ஸோசியேசன் (Photo-Dissociation) என்று அழைக்கப்படுகிறது! இந்த ஓசோன் வாயுக்கள் மீண்டும் புறஊதாக்கதிர்களுடன் வேதிவினைபுரிந்து முன்பு சொன்னது போல் ஆக்ஸிஜன் வாயுக்களாகவும், ஆக்ஸிஜன் அனுக்களாகவும் மற்றும் வெப்ப ஆற்றலாகவும் சிதைவுருகிறது! சிதைவுற்ற இவை இணைந்து மீண்டும் ஓசோன் வாயுக்களை மேற்சொன்ன போட்டோ-டிஸ்ஸோசியேசன் வேதிவினை மூலம் தோற்றுவிக்கின்றன! சங்கிலி தொடர் போல் நீளும் இந்த நிகழ்வின் மூலம் ஓசோன் வாயுக்கள் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை உறிஞ்சிக்கொள்வதோடு மட்டுமின்றி தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது! ஓசோன்-ஆக்ஸிஜன் சைக்கிள் (Ozone-Oxygen Cycle) என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு 1930-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் வல்லுனரான சிட்னி சேப்மேன் (Sydney Chapman, 1888 – 1970) என்பவரால் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது!

இந்த வேதிவினையில் ஆக்ஸிஜன் அணுக்கள் (O) தனித்திருக்கும் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படுவதில்லை, அவை தாமாகவே ஆக்ஸிஜன் வாயுக்களுடன் (O2) இணைந்து, ஓசோன் (O3) வாயுக்களை உற்பத்திசெய்துவிடும் மாறாக அவை தனித்து இருக்காதபோதுதான் பிரச்சனை வெடிக்கஆரம்பிக்கும்! தனித்து நிற்காமல் என்ன ஆகிறது என்கிறீர்களா? இந்த இடத்தில் தான்... நமது ஃப்ரிட்ஜ் கதை வருகிறது! அதாவது ஃப்ரிட்ஜ் (Fridge), ஃப்ரீசர் (Freezer) மற்றும் ஏர்கண்டிஷ்னர்கள் (Air-Conditioner) உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளில் குளிரை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் (Chlorofluorocarbon, Knows as CFC) இந்த இடத்தில் தான்.., தன் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது! இதிலுள்ள கட்டுப்பாடற்ற வேதிவினையூக்கியான (Free Radical Catalyst) குளோரின் (Chlorine) தனித்து நிற்கும் ஆக்ஸிஜன் அணுக்களுடன் (O) இணைந்து வேதிவினைபுரிந்து குளோரின் மோனாக்சைடுகளை (Chlorine Monoxide; ClO) தோற்றுவித்துவிடுகின்றன! இதனால் ஆக்ஸிஜன் அணுக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு ஓசோன் வாயுக்கள் மீண்டும் உருப்பெறும் வேதிவினையான போட்டோ-டிஸ்ஸோசியேசன் தடைபட ஆரம்பிக்கும்! இதன் காரணமாக ஓசோன் வாயுக்களின் எண்ணிக்கை குறைந்து அந்த இடத்தில் ஓசோன் வாயுக்களின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்! இதைத்தான் நாம் ஓசோனில் ஓட்டை (or) துளை விழுந்துவிட்டதாக கூறுகிறோம்! அடர்த்தி குறைந்த இந்த பகுதியின் வாயிலாக புறஊதாக்கதிர்கள் எளிதாக உள்நுழைந்து புவியை வந்து சேர ஆரம்பிக்கிறது!


குளோரின் தனித்து நிற்கும் ஆக்ஸிஜன் அணுக்களுடன் மட்டுமல்ல ஓசோன் வாயுக்களுடனும் கூட நேரடியாக வேதிவினைபுரிந்து அவற்றை குளோரின் மோனாக்சைடாகவும் (ClO) மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களாக (O2) சிதைக்கும் வல்லமை கொண்டது! இந்த வேதிவினையில் உருவான குளோரின் மோனாக்சைடு கூட ஓசோன் வாயுக்களுடன் வேதிவினை புரிந்து அவற்றை குளோரினாகவும் (Cl) ஆக்ஸிஜன் வாயுக்களாகவும் (O2) சிதைக்கும் தன்மை கொண்டது! சங்கிலி தொடர் போல் நீளும் இந்த வேதிவினையில் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் குளோரின் மோனாக்சைடு (ClO), குளோரின் (Cl) மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் (O2) தான் வெயிடப்படுகிறதே தவிர்த்து ஆக்ஸிஜன் அணுக்கள் வெளியிடப்படுவதில்லை  என்பது புரிய ஆரம்பிக்கும்! ஆக்ஸிஜன் அணுக்கள் கிடைக்காமல் போகும்போது சிதைவடைந்த ஓசோன் வாயுக்கள் மீண்டும் உருப்பெறும் நிகழ்வு முற்றிலுமாக தடைபட ஆரம்பிக்கும்! தொடர்ந்து ஓசோன் வாயுக்களின் எண்ணிக்கை வேகமாக சரிய ஆரம்பித்து வாயுக்களுக்கு இடையேயுள்ள இடைவெளி தொடர்ந்து பெரிதாகக் கொண்டே போகும்!

ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டை முதன் முதலாக 1985-ஆம் ஆண்டு தான் வெளிஉலகிற்கு தெரியவர ஆரம்பித்தது! இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியல் வல்லுனர்களான ஜோசேப் ஃபார்மேன் (Joseph Farman, 1930 – Present), ஜான் ஷாங்க்ளின் (Jon shanklin, 1953 – Present) மற்றும் ப்ரய்யன் கார்டினர் (Brian Gardiner) ஆகியோர் கொண்ட விஞ்ஞானிகள் குழு 1985-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி ஓசோனில் துளை இருப்பது குறித்தும் குளோரோ ஃப்ளோரோ கார்பன்களால் ஓசோன் படலம் சிதைக்கப்படுவது குறித்தும் தங்களது விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்பே வெளியுலகத்திற்கு இதன் தாக்கம் புரிய ஆரம்பித்தது! தொடர்ந்து அமெரிக்கா 1987-ஆம் ஆண்டு தி மோன்ட்ரியல் புரோட்டோக்கால் (The Montreal Protocol) என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் ஃப்ரிட்ஜ், ஃப்ரீசர் மற்றும் ஏர்கண்டிஷ்னர்கள் உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளில் குளோரோ ஃப்ளோரோ கார்பன்களை பயன்படுத்த உலகம் முழுவதிலும் தடையை ஏற்படுத்தியது! தற்போது குளோரின் இல்லாத ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் (Hydro fluorocarbon) தான் குளிர்சாதன பெட்டிகளில் குளிரை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!


ஓசோன் படலம் புறஊதாக்கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியை காப்பதோடுமட்டுமின்றி புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதிலும் ஏனைய கிரீன் ஹவுஸ் வாயுக்களுடன் (Green House Gas; Water Vapor (H2O), Carbon Dioxide (CO2), Methane (CH4), Nitrous Oxide (N2O) and Ozone (O3)) முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை! வளிமண்டலத்தில் இருந்து இந்த ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும்போது உடனடி எதிர்விளைவாக புவியின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பிக்கும், இதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர ஆரம்பிக்கும்! இது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மற்றொருபுறம் அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்! மிகமுக்கியமாக மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களையும் இக்கதிர்கள் நேரடியாக தாக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை உண்டாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது! இக்கதிர்கள் தாவரங்களை தாக்கும் போது அவற்றின் உற்பத்தி திறன் மோசமாக குறைய ஆரம்பிக்கும்! தாவரங்கள் பூக்காது.. பூத்தாலும் காய்க்காது!

கடல்வாழ் உயிரினங்கள் கூட இக்கதிர்வீச்சுகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இயலாது! லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை நொடியில் கொன்று குவிக்கும் அபாரவல்லமை கொண்டது இந்த புறஊதாக்கதிர்கள்! என்ன நண்பர்களே நினைத்து பார்க்கும்போதே நமக்கு உதறலெடுக்கிறது அல்லவா? ஆனால் இப்போதும் கூட நாம்.. நம்மை திருத்திக்கொள்ளவில்லை என்பதை கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது! அந்த புள்ளிவிபரங்களின் படி உலகம் முழுவதும் இன்றும் 5% – 10% வரை குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்பாட்டில் இருப்பதாக அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது! தி மோன்ட்ரியல் புரோட்டோக்கால் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் கையெழுத்திடாததால்., கையெழுத்திடாத குறிப்பிட்ட அந்த நாடுகளில் ஃபிரிட்ஜ், ஃபிரீசர் மற்றும் ஏர்கண்டிஷ்னர்கள் உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளில் குளோரோ ஃபுளோரோ கார்பன்தான் குளிர்விப்பானாக இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது!



அதுமட்டுமின்றி உலகின் பெரும்பாலான தேசங்களில் பாலியெஸ்டிரின் (Polystyrene) மற்றும் பாலியூரிதீன் (Polyurethane) போன்ற பிளாஸ்டிக்குகள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் பிளாஸ்டிக்கை உருக்கி மீண்டும் குளிர்விக்கும்போது குளிர்விப்பானாக குளோரோ ஃபுளோரோ கார்பன்தான் இன்றளவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது! இதைத்தவிர்த்து ஏரோசோல் வகை ஸ்ப்ரேக்களில் (aerosol spray, such as paints & medicinal spray and etc) அடைக்கப்பட்டிருக்கும் திரவத்தில் குளிரை நிலைநிறுத்துவதற்காக பெரும்பாலும் இன்றளவும் குளோரோ ஃபுளோரோ கார்பன்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறதுஇப்போதுவரை வளிமண்டலத்தில் வெளியேற்றம் செய்யப்பட்ட குளோரின் வாயுக்களின் தாக்குதல்களிலிருந்து ஓசோன் மீளவே இன்னும் 100 முதல் 150 ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்... என்றால் இதன் பிறகும் நம்மை திருத்திக்கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ நம்மை.. நாம் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இந்த பூமி பிணங்கள் வாழும் கல்லறையாக மாறிப்போவதை இறைவனால் கூட தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் வருத்தமான உண்மை!

சுற்றுசூழல் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய இத்தொடர்பதிவின் இறுதிப்பாகம் உங்களுக்காக காத்திருக்கிறது நண்பர்களே, தொடர்ந்து இணைப்பில் இருங்கள்! பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய மறக்க வேண்டாம்! உங்கள் கருத்துக்கள் மூலமாகத்தான் என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை வளர்த்துக்கொள்ளவும் முடியும்! விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்., நன்றி..., வணக்கம்!!!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

135 comments:

  1. மிகவும் தேவையான நல்ல விளக்கமான சுற்றுசுழல் பற்றிய பதிவு... நல்ல படைப்பு தோழரே! இது என்னுடைய முதல் வருகை நண்பரே! உங்களையும் என் வலைக்கு அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓய்வு நேரத்தில் நிச்சயம் தங்கள் தளத்திற்கு வருகை புரிவேன்., வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  2. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய நல்லதொரு பதிவு...

    இன்னும் எதிர்காலம் என்னவாகுமோ...


    மக்கள் சுற்றுப்புறத்தை சீராக வைத்திருக்காத பட்சத்தில் அழிவு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!

      Delete
  3. An excellent article.thank you. I have cleared my doubt on this subject after a very long time.Pl continue your activities.

    ReplyDelete
    Replies
    1. thanks for your visit and thanks for your valuable feedback sir!

      Delete
  4. முதலில் பூங்கொத்து பிடிங்க தம்பி !!!! உங்க உழைப்பு ஆராய்ச்சி அனைத்தும் இந்த பதிவில் தெரிகிறது ....ஓசோன் depletion// effects on humans and environment //மிக அருமையான விளக்கம் ..

    சைனாக்காரன் இப்பே weather modification வேறு செய்ய ஆரம்பிச்சாச்சு
    :((
    நாம் நம்மை திருத்திக்கொண்டு இயற்கையோடு சேர்ந்து வாழ்வதே நன்மை பயக்கும் .

    ReplyDelete
    Replies
    1. >>weather modification<<<

      அவ்வ்வ்...அக்கா உங்களுக்கும் சயின்ஸ் ரொம்ப பிடிச்ச பாடம் போல இருக்கே?

      weather modification ஒரு அற்புதமான technology, இதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம் கெட்டதுக்கும் பயன்படுத்தலாம்! weather modification technology-ஐ பயன்படுத்தி தங்களது எதிரி நாட்டின் மீது கட்டுக்கடங்காத சூறாவளி, புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை உருவாக்கி பொருளாதார ரீதியாக அந்த நாட்டை சின்னாபின்னம் ஆக்காலாம்!

      கடைசியாக சீனா நடத்திய ஒலிம்பிக் போட்டியின் போது தான் எனக்கு weather modification technology பற்றி தெரியவந்தது! 2008 ஒலிம்பிக் போட்டிக்காக சீனா கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி வரை செலவழித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது! இதில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற பீஜிங் நகரில் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்களில் மழை பெய்துவிடாமல் தடுப்பதற்காக மட்டும் (through weather modification technology) கிட்டத்தட்ட 50,000 கோடி வரை செலவழித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அக்கா!

      Delete
  5. ரெம்ப அற்புதமான பதிவு நண்பரே

    ReplyDelete
  6. அருமையான பதிவு , இன்னும் CFC வெளியேற்றபடுகிறது என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்று தான். ஆனால் தற்பொழுது CFC எதன் முலம் வெளியேற்றபடுகிறது ?.

    ReplyDelete
    Replies
    1. தி மோன்ட்ரியல் புரோட்டோக்கால் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் கையெழுத்திடாததால் இன்றளவும் சில நாடுகளில் ஃபிரிட்ஜ், ஃபிரீசர் மற்றும் ஏர்கண்டிஷ்னர்கள் உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளில் குளோரோ ஃபுளோரோ கார்பன் இன்றளவும் பயன்பாட்டில் தான் உள்ளது! உலகின் பெரும்பாலான தேசங்களில் பாலியெஸ்டிரின் (Polystyrene) மற்றும் பாலியூரிதீன் (Polyurethane) போன்ற பிளாஸ்டிக்குகள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் குளிர்விப்பானாக இன்றளவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது! இதைத்தவிர்த்து ஏரோசோல் (aerosol spray; such as body spray) போன்ற ஸ்ப்ரேக்களில் அடைக்கப்பட்டிருக்கும் திரவத்தில் குளிரை நிலைநிறுத்துவதற்காகவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது!

      இதனை பதிவில் விரைவில் அப்டேட் செய்துவிடுகிறேன் நண்பா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. அய்யயோ அப்ப perfume யூஸ் பண்றது நாலையும் ozone affect ஆகுதா !!!!,நண்பா u have made an impt awareness... I'm now thinking of alternatives to my body spray...

      Delete
    3. Mostly...perfume-ல CFC இருக்காது நண்பா...பட்.. medicinal spray items-ல mostly...CFC பயன்படுத்துறாங்க...ஈசியா புரியனும்ங்கிறதுக்காகத்தான் நான் such as-ன்னு சொன்னேன்!

      Delete
  7. மிக அருமையான விளக்கமான பதிவு....பல விஷயங்களை புதிதாக தெரிந்துகொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!

      Delete
  8. மிக அருமையான பதிவு. எளிமையாக புரியும்படி விளக்கி இருக்கிறீர்கள்.
    எனது பாராட்டுக்கள்.

    Tamil Portal

    ReplyDelete
  9. மிகசிறந்த இடுகை பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  10. மிகவும் சிறந்த இடுகை.உங்கள் பதிவைபடிப்பதன் மூலம் நிறைய தவல்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.தொடருஙக்ள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  11. மிகவும் பிரயோசனமான பதிவு சார்
    உண்மையைச் சொல்லப்போனால் 10 ஆம் வகுப்பில் படித்த விஞ்ஞான பெயர்களை நீண்ட நாட்களின் பின் இந்தப் பதிவில் ஞாபகப்படுத்திக் கொண்டேன்..




    ReplyDelete
    Replies
    1. நினைவளைகளிளிருந்து மீட்டு சில விசயங்களை மீண்டும் உங்கள் ஞாபகத்திற்கு கொண்டுவருவதற்கு எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன்!

      Delete
  12. ஓசோன் படலம் என்றதுமே நம் நினைவில் வருவது..., வீட்டில் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ்ஜிம் (Fridge) அதுவெளியிடும் குளோரோ ஃபுளோரோ கார்பனும் (Chlorofluorocarbons)

    /////////////////////////////

    ஹா ஹா ஹா..... உண்மைதான் எனக்கும் அவ்வாறுதான் சார்..
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குருவி!

      Delete
  13. வசு... நான் பொறுமையாக வந்து படிக்கிறேன்.
    அவசர அவசரமாக படித்தால் என் மரமண்டைக்குள் ஏறாது. அதனால் தான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க..வாங்க..பொறுமையா வாங்க..! :)

      Delete
  14. விளக்கங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...

    /// இந்த பூமி பிணங்கள் வாழும் கல்லறையாக மாறிப்போவதை இறைவனால் கூட தடுத்து நிறுத்த முடியாது என்பது தான் வருத்தமான உண்மை... ///

    இப்போதே 'உயிருடன்' பல பிணங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பது தான் உண்மையான உண்மை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபால் சார்!

      Delete
  15. தம்பி சையின்ஸ் வாத்தியா..? முடியல.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.. வாத்தியார் பாடம் நடத்துறமாதிரி பதிவு அவ்வளவு மொக்கையாகவா பதிவு இருந்துச்சு! :)

      Delete
  16. suvadukal!

    ariviyal enakku theriyaathu!
    aanaalum enakkum purinthathu-
    ungal ezhuthu !

    arumaiyaana pathivu!

    thodarungal nanpaa!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனி!

      Delete
  17. பயனுள்ள பதிவு நண்பா..

    பல்வேறு செய்திகளையும் அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  18. இது போன்ற பதிவுகள் அரிதாகவே வருகின்றன.சிறப்பு!தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  19. வசு... ஏதோ ஓசோன்ல ஓட்டை விழுந்துடுச்சின்னு படிச்சிருக்கிறேன்.
    ஆனால் அதனுள் இவ்வளவு விசயம் இருக்கிறது என்று தெரியாது.

    அருமையான பகிர்வுதான்.
    ஆனால் அப்படி ஓட்டை விழாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சற்று விரிவாக விளக்கியிருகலாம்.
    நன்றி வசு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏனைய வழிகளை விட CFC-யால் குறிப்பாக அதிலுள்ள வேதிவினையூக்கியான குளோரினால்தான் ஓசோன் அதிகம் பாதிப்படைகிறது ஆகையால் CFC பயன்படுத்துவதை கட்டுக்குள் கொண்டுவந்தாலே ஓசோன் பாதிக்கப்படுவது குறைந்துவிடும்!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்!

      Delete
  20. இயற்கை சூழலோடு இணைந்து வாழ நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள வேண்டும்.எங்க....சிறிது நேரம் பவர்கட் ஆனாலே ஸ்..அப்பாடான்னு பெருமூச்சு விட்டு இயற்கையை மதிக்காமல் ஏ.சி யின் பெருமையை பேசிக்க கொள்பவர்களே அதிகம் இருக்கிறார்கள்.நம்மை திருத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ அனைவரும் பழக வேண்டும்.அருமையான பதிவு தம்பி.தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கும் நகர் மயம் அதனால் ஏ.சி இல்லாமலும் ஒன்னும் பண்ணமுடியாது அக்கா..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  21. இயற்கையை என்று மனிதன் கெடுக்க துவங்கிநானோ அன்றே நமக்கும் இயற்கைக்கும் யுத்தம் ஆரம்பித்துவிட்டது . நல்ல கருத்துகள் , நல்ல தகவல்கள் , நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!

      Delete
  22. யோவ் காப்பி பண்ணமுடியாத மாதிரி வச்சிட்டு...லொள்ள பாரு லோலாயி தனத்த பாரு...

    அய்யா வரலாறே... பதிவுலக நோபல் பரிசு கொடுக்கும்படி பிரபல பதிவர்களுக்கு சீகிரமே மனு ஒன்று எழுதுகிறேன்...

    அது எப்படி அய்யா ஒன்று எழுதினாலும் நச்சென்று எழுதுகிறீர்... அந்த வித்தையைக் கற்றுக் கொடுமே

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த அருமையான பின்னூட்டத்தை மனப்பாடம் செய்துகொண்டேன்.., தக்க சமயத்தில் மற்றும் தகுந்த இடத்தில் பயன்படுத்துகிறேன்!

      அப்புறம்... நோபல் பரிசுக்கான பரிந்துரையோடு நிறுத்திக்கொள்ளாமல்..பத்மபூஷன்.. பத்மவிபூஷன்...பரம்வீர்சக்ரா போன்ற விருதுகளுக்கும் பரிந்துரைக்கவும் நன்றி!

      Delete
    2. இதுக்கெல்லாம் அம்மாதான் ரெகமண்ட் பண்றாங்க எதுக்கும் நாமலும் ஒரு மனு போட்டு வைப்போம். :)

      Delete
  23. மிகவும் அருமையான நல்ல பயன்னுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  24. இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  25. விவரங்கள் கொண்ட பதிவு. இருமுறை படித்து விளங்கிக் கொண்டேன். சூழல் குறித்து பேசும் எனக்கு மிகவும் பயன்படக் கூடியதான பதிவு. எனக்கான கேள்வியை சூர்ய பிரகாஷ் அவர்களின் கேள்வி மூலம் பதில் பெற்றேன். போட்டோ டிஸ்ஸோசியேசன் பகுதிதான் கொஞ்சம் குழப்பம் கொடுத்தது. குளோரா ஃப்ளூரான்களை மொத்தமாக பயன்பாட்டிலிருந்து விலக்க எந்த வரையரையும் வகுக்கப்படவில்லையா. மேலும் சி.எப்.எல் பல்பை விட எல்.ஈ.டி பல்புகள் சிறந்தவை என்கிறார்கள் அது குறித்து பதிவு எழுதியுள்ளீர்களா?

    ReplyDelete
    Replies
    1. போட்டோ-டிஸ்ஸோசியேசன் பற்றி அதிகம் குழப்பிக்கொள்ள தேவையில்லை அது ஜஸ்ட் ஒரு reverse reaction அப்படின்னு நினைச்சுக்கோங்க அவ்வளவுதான்!

      CFC-ஐ உலகம் முழுவதும் பயன்பாட்டிலிருந்து விலக்க Montreal protocol ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகளை கையெழுத்திட வைக்கும் முயற்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது! குறிப்பாக Sep 12, 2011-க்கு பிறகு! அதென்ன Sep 12 என்ற கணக்கு என்கிறீர்களா? இதற்குரிய பதில் கீழே உள்ள கருத்துரைக்கான எனது பதிலில் ஒளிந்திருக்கிறது :)

      answer about your question of LED & CFL bulbs, i'm working on it and if possible let you know in my next article, thanks for the understanding!

      Delete
  26. சூப்பர், ஏகப்பட்ட தகவல்.அப்புறம் இப்போ ஓசோனில் உள்ள ஓட்டை எவ்வளவு பெருசு இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஓசோனின் ஓட்டை என்பது கனத்தின் அடிபடையிலே அளவிடபடுக்கிறது
      http://ozonewatch.gsfc.nasa.gov/
      இந்த தளத்துக்கு போவிங்க என்றா நீங்க நேரடியாவே பல விடயங்கள் நாசா மூலம் அறியலாம்..

      Delete
    2. கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி கணக்கீட்டின்படி ஓசோனில் உள்ள ஓட்டையின் அளவு 26 மில்லியன் சதுர கிலோ மீட்டர (26 Million Square Kilo Meter) இது கிட்டத்தட்ட வட அமெரிக்காவின் மொத்த பரப்பளவிற்கு சமமானது! துளையின் அளவு கடந்த 2009 - 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம் என்று அறியப்படுகிறது!

      Delete
  27. உங்கள் பதிவின் மூலம் அறிவியல் இனிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  28. ஓசோன் பற்றி அதிகம் தேவையான தகவல்களை திரட்டி கொடுத்து இருக்கீங்க நண்பா முதல்ல அதற்க்கு வாழ்த்துக்கள். சிலது மறுபடி மறுபடி வாசித்த போதே புரியும் படி இருந்த முக்கிய தகவல்களாக இருந்தது. (இந்த மறுபடி மறுபடி என்கிறது உங்களுக்கு வெற்றியா இல்ல சறுக்கலா என்று கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவும்)

    ஓசோன் பற்றி சொல்ல போனா சின்ன வயசுல என் கற்பனையில பண்ணி வைச்சது நம்ம உயிரை காப்பாத்த போராடும் நம்ம உயிருக்கு பாதிப்பு விளைவிக்கும் ஒரு வகை வாயு. (ஆனால் பாதிப்பு என்பது அதன் அடுக்கின் அடிப்படையில் வேறுபடும் என்று நினைக்கிறேன். இது பற்றி தெளிவின்மையே நிலவுகிறது எனக்கு.. ஆனால் சுவாசத்துக்கு பாதிப்பு என்று படித்த ஞாபகம்)

    ஆனா ஓசோன் உருவான வரலாறு (அதான் ஒட்சிசன்) குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்) பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டு அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது. இந்த வரலாறை எனது மூளையின் ஒரு பகுதி ஏற்றாலும் இன்னொரு பகுதி அட போங்கப்பாவே சொல்ல வைக்கிறது.

    Photo-Dissociation இந்த மேட்டர் தான் வாசித்த வரை தான் புரிகிறது..

    மற்றபடி மிக அவசியமான பதிவு.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பொது சேவை..

    ReplyDelete
    Replies
    1. >>>மறுபடி மறுபடி என்பது<<<

      ம்ம்ம்ம்....வார்த்தை சிக்கனம் அவசியம் என்று தற்போது வாசித்து பார்க்கையில் உணர்கிறேன்! ஒரு நாள் லேட்டாக பதிவை போஸ்ட் செய்திருந்தால் இன்னும் அதிகமாய் பதிவை மெருகேற்றியிருக்கலாம்.. அவசரப்பட்டுவிட்டேன்...இனி கவனம் கொள்கிறேன்!

      வருகைக்கும் மிக நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  29. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பகிர்வு.

    ReplyDelete
  30. அருமையான தகவல்கள் நண்பரே..

    ReplyDelete
  31. அருமையான நல்ல கருத்து அண்ணா...

    அறிவேண்டிய விடயம்.................

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எஸ்தர்!

      Delete
  32. வரலாறு

    வாழ்த்துக்கள் - நல்ல அலசல்

    விரிவா விளக்கம் - நன்றி தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  33. ஓசோன் பற்றிய பதிவிற்கான உழைப்பிற்கு முதலில் பாராட்டுக்கள்..
    கிட்டத்தட்ட ஓசோன் என்பது பூமி உருண்டை போட்டிருக்கும் கூலிங் கிளாஸ் மாதிரி இல்லையா நண்பா?
    ஓசோன் ஓட்டையைப்பற்றி தெளிவான விளக்கம்...சூப்பர்...
    பத்து கிலோமேடருக்கு மேல் ஓசோன் படலம் ஆரம்பிக்கிறதென்றால்,விமானம் கூட பத்து கிலோமீட்டர் உயரத்தில் தானே பறக்கிறது..அப்படினா இவ்வளவு தடவையும் ஓசோன் படலத்திற்கு அருகில்தான் பறந்திருக்கிறோம்...நல்ல விழிப்புணர்வுப் பதிவு... (19)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகள் அனைத்தையும் நான் ஆமோதிக்கிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  34. நலமா நண்பரே?

    தமிழ் சினிமா காமடிகளில் கூட உச்சரிக்கப்படும் வார்த்தை ஓசோன்...எல்லா தமிழர்களும் கேள்விப்பட்ட ஒன்று...

    இதை வாசிக்கையில் தெளிவு கிடைக்கும் அவர்களுக்கு...
    தொடர்ந்து இது போல் கலக்குங்கள்...

    அக்டோபர் இறுதியில் மறுபடிவருகிறேன்...(எப்படியும் நீங்க அப்ப தான் மறுபடி எழுதுவீர்கள்...கலாம் கூட கூடன்குள கரண்டீ கார்ட் அடிக்க இவ்வளவு நாள் எடுத்திருக்கலாமோ? -:))

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எப்பிடி இருக்கீங்க ரெவெரி சார், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

      >>>அக்டோபர் இறுதியில் மறுபடி வருகிறேன் (எப்பிடியும் நீங்க அப்பத்தான் மறுபடி எழுதுவீங்க<<<

      ஹி ஹி என்னை சரியா ஜட்ஜ் பண்ணி வச்சிருக்குற ஒரே ஆள் நீங்கதான்! வாங்க வாங்க :) :)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
    2. நலமா?

      என்ன ரொம்ப பிஸியா?

      ஒரு பதிவும் எழுதவே இல்லை...

      மொத்தமா புத்தகம் போடப்போறீங்களா?

      எனக்கென்னவோ 12 ம் வகுப்பு அறிவியல் புத்தகங்களை புதுசா எழுதிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...

      கத்திரிக்காய் ****ஆ சந்தைக்கு வந்து தானே ஆகணும்...

      Delete
  35. இன்னொரு முறை நான் பதிவர் அறிமுகத்தை உங்களுக்கென்றே கொடுக்கவேண்டும் போல இருக்கு..

    கல்லையும் உணர்ச்சிவசப்பட வைக்கும் உங்கள் பதிவு மிக அருமை சகோ,,

    பதிவு என்பது சாதரணமாக இவ்வளவு தெளிவாக எழுத முடியாது..

    தொடருங்கள் சகோ,,, மிக மிக அருமையான பதிவு,,

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பற்றியும்.. என் எழுத்துக்களை பற்றியும் தாங்கள் வைத்திருக்கும் உயர்ந்த அபிமானத்திற்கு மிக்க நன்றி தொழிற்களம் குழு!

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது! அடிக்கடி வருகை தாருங்கள்!

      Delete
  36. ஓசோன்ல ஓட்டை,அது ரொம்ப ஆபத்தானதுன்னு மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனா, அதுல இருக்குற சூட்மங்களை பற்றி விலாவரியா உங்க தளத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். பிள்ளைகளுக்காக காப்பி பண்ணி எடுத்துக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி தம்பி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி அக்கா!

      Delete
  37. நல்ல விளக்கமான பதிவு நன்பரே.பல அரிய தகவல்களை சேகரித்து அளித்துள்ளது பாராட்டத் தக்கது.
    என் பதிவிற்கான பின்னூட்டத்தில்// ரேங்க் ஏற்ற இறக்கத்திற்கு பதிவுகளின் எண்ணிக்கையும் ஒரு காரணமாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது!//
    அலெக்சா தரவரிசயில் பதிவுகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. மூன்றுமாத மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் தரவரிசையை முடிவு செய்கிறது. என்வே அலெக்சா வைப் பொருத்தவரை பதிவுகளின் எண்ணிக்கை பற்றி கவலைப் படத் தேவை இல்லை.
    உங்கள் பதிவுகளைப் பொருத்தவரை எப்போதும் தேடிப் பிடித்து படிக்கும் பதிவுகளாக அமைந்துள்ளது சிறப்பு.தொடர்க உங்கள் பணி.

    ReplyDelete
    Replies
    1. நேற்று ஒரு கருத்து போட்டிருந்தேன் எங்க போச்சு தெரியல...ஓசோன் குறித்த அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க வேதியல் பற்றி எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் சமண்பாடு (குறியீடு ..) இல்லாமலே கெமிகல் ரியாக்சன் குறித்து பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்திருக்கீங்க. எல்லாம் அப்டேட்டேட் செய்தி. இதுக்கு எவ்வளவு நேரம் செலவளிச்சிருப்பீங்க..உணர முடியுது. ஹாரி சொன்னமாதிரி பாக்டீரியா காரணமான்னு தெரியல ஆனா சூரியனில் இருந்து வெளி வரும் UV இல்லேன்னா ஓசோன் இல்லங்கரது என்னவோ உண்மை.

      Delete
    2. @ T.N.MURALIDHARAN,

      பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உடன்சேர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால்தான் ரேங்க் ஆட்டோமேட்டிக்காக மாறுகிறது என்று கருதுகிறேன்!

      விளக்கத்திற்கு நன்றி சார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    3. @கலாகுமாரன்,

      ஸ்பாம் பாக்ஸ்சிலும் சோதித்து பார்த்தேன் அதிலும் தங்களின் கருத்து இல்லையே நண்பரே! anyhow.. இனிமேல் இதுபோல் பிரச்சனை ஏற்படாது என்று நம்புவோமாக!

      UV கதிர்கள் இல்லையென்றால் ஓசோன் வாயு இருந்திருக்காது என்பது என்னவோ உண்மைதான்!

      உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பரே.. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அறிந்தவரையில் ஓசோன் மண்டலம், புவியை தவிர்த்து செவ்வாய் மற்றும் வெள்ளியில் மட்டுமே அமைந்திருக்கிறதாம்! :) :)

      Delete
  38. ஓசோனைப்பற்றி அறிந்திருந்தாலும் தமிழில் நீங்கள் வழங்கிய இந்தக்கட்டுரை நிறைய தகவல்களுடன் மாணவர்களுக்கும் உதவும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      Delete
  39. Replies
    1. எனக்கு இங்கிலீசு பிரியாது ஹி ஹி ஹி!

      Delete
  40. Replies
    1. ரைட்டு...கிளம்பீட்டாங்கப்பா கிளம்பீட்டாங்க! :) :)

      Delete
  41. அழகா, சிரிச்ச மாதிரி நீலக்கலர்ல பனியன் போட்ட பையன காணோம்.?

    ReplyDelete
    Replies
    1. நீங்க அழகா இருக்கிறதா சொல்றீங்க...ஆனா இன்னொருத்தர்...அந்த போட்டோவை பார்த்தா வாந்தி வாந்தியா வருதுன்னுட்டார் :( :(

      Delete
  42. அருமையான பகிர்வு மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க
    நன்றி சகோ பகிர்வுக்கு .உங்கள் ப்ரோபைல் பிக்சறை மாற்றாமல்
    இருந்திருக்கலாம் சகோ .தரமான பதிவினை வழங்கும் தங்கள்
    முகம் அவ்வளவு அசிங்கமாவா இருக்கு :)

    ReplyDelete
  43. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே புரியவில்லை. ஏனெனில் இந்தப் பதிவு எனக்கு அத்தனை உபயோகமாக உள்ளது. என் மகனுக்கு அசைன்மெண்ட் தலைப்பு இதுதான். என்னிடம் உதவி கேட்டிருந்தான். எனக்கே அதைப் பற்றி முழுவிவரம் தெரியா நிலையில் நான் எப்படி அவனுக்கு உதவ முடியும்? இந்தப் பதிவின் மூலம் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. மிக மிக நன்றி வசு.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு இந்த பதிவு உதவிகரமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ! சுற்றுசூழல் தொடர்பான இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய மேலும் இரண்டு பதிவுகள் தகவல்கள் சேகரிக்கப்பட்டு எழுதப்படாமல்... பேப்பர் வொர்க் முடிக்கப்பட்டு அப்படியே நிற்கிறது! இயன்றால் அந்த பதிவுகளை எழுதி போஸ்ட் செய்கிறேன் இல்லையேல் ஜனவரிக்கு பிறகு புதிய வேகத்தில் எழுத ஆரம்பிப்பேன்!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  44. உங்களை பின்பற்றி தினமலர் பத்திரிகை " வரலாறு சுவடுகள் எழுத ஆரம்பித்து விட்டதோ ?

    profile படம் யாருங்கோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.., எனக்கு தெரியவில்லையே.., நான் அதிகம் தினமலர் படிப்பதில்லை...தினத்தந்திதான்... இது தொடர்பான பதிவுகள் இருப்பின் இணைப்பு தாருங்கள்..வாசித்துபார்க்கிறேன்!

      profile படம்...இணையத்தில் இருந்து சுட்டதுதான்..நல்லாயிருக்கா? :)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரேம்!

      Delete
  45. நல்ல பயனுள்ள ஒரு இடுகை! பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பக்கதில்" மீட்டிட வருவானோ?" கவிதை! நன்றி! வருகை தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஓய்வு நேரத்தில் தங்கள் இணையப்பக்கம் வருகிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
  46. ஓசோனை பற்றி தெளிவாக சொல்லி இருக்கீர்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  47. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

    நன்றி…

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி தனபாலன் சார்...வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  48. ஹே!! அடுத்த பதிவு எப்பப்ப போடுவே..?

    ReplyDelete
    Replies
    1. உயர்கல்விக்கான தேர்வுக்கு படிக்கிறேன் நண்பரே, ஆகையால் வலைத்தளத்தில் அடுத்த பதிவு ஜனவரியில் தான்!

      Delete
  49. உபயோகமான பதிவுக்கு நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  50. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ளப் பதிவு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  51. நலமா?

    என்ன ரொம்ப பிஸியா?

    ஒரு பதிவும் எழுதவே இல்லை...

    மொத்தமா புத்தகம் போடப்போறீங்களா?

    எனக்கென்னவோ 12 ம் வகுப்பு அறிவியல் புத்தகங்களை புதுசா எழுதிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...

    கத்திரிக்காய் ****ஆ சந்தைக்கு வந்து தானே ஆகணும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்பரே...நான் நலம்., நீங்கள் நலமா? வரும் ஜனவரியில் உயர் கல்வி தொடர்பாக எனக்கு தேர்வு இருக்கிறது..அதற்காக படித்துக்கொண்டிருப்பதால் புதிய பதிவுகள் ஏதும் எழுத இயலவில்லை அன்பரே.! தேர்வை முடித்துவிட்டு புதிய வேகத்துடன் திரும்புவேன்!

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

      Delete
  52. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபால் சார்!

      Delete
  53. அன்பு நண்பரே இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

    நன்றி

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே.!

      Delete


  54. அருமையான பயனுள்ள பதிவு.

    தங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த ஏன் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்!

      Delete
  55. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரதர்..... என்னை நினைவில் வைத்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றியுடையவனாகிறேன்...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      Delete
  56. தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      Delete
  57. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    என்னுடைய இதயம் நிறைந்த இனிய
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் வசு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அருணா செல்வம்!

      Delete
  58. எப்பவும்போல பொறுமையாகப் படிக்கவேண்டிய பதிவு.அத்தனை தேடல்.வாழ்த்துகள் வ.சு .இனிய தீபாவளி வாழ்த்துகளும் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா அக்கா.., வாழ்த்துக்கு மிக்க நன்றி.!

      Delete
  59. http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_15.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  60. புதிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
  61. ஒரே மூச்சில் உங்களின் மூன்று பதிவுகளையும் படித்தேன். அட்டகாசம் ......

    இந்தியாவில் ப்ரியான் R-11 குளிரூட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது பின்னர் R-22 ,தற்போது R-32பயன்படுத்த படுகிறது. R-11 விட R-32 ஒசோனின் படுகையில் பாதிப்பை மிக குறைவாக ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் (இது குறித்து ஆழமான விளக்கம் தெரியவில்லை).

    உங்களின் அற்புத பதிவுகளை ஏன் ஒரு நூலாக வெளியிடக்கூடாது?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே... நூல் பற்றிய திட்டம் இருக்கிறது, குறைந்தது நூறு பதிவுகளாவது எழுதிவிட்டு அதன் பிறகு முயற்ச்சிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!

      Delete
    2. எனக்கு ஒரு பிரதி அட்வான்ஸ் புக்கிங்க்....

      Delete
    3. உங்களுக்கு இல்லாமலா நண்பரே....ஒன்றென்ன நூறு பிரதிகள் அனுப்பிவிடுவோம் :-))

      Delete
  62. எதிர்வரும் அழிவை நினைத்தால் மனம் பதட்டமடைகிறது.

    -வீரா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

      Delete
  63. Replies
    1. thanks for your comments buddy, please do visit often.!

      Delete
  64. இந்த மனிதர்கள் எப்போதுதான் திருந்துவரோ

    ReplyDelete
    Replies
    1. அதற்கெல்லாம் வழியில்லை நண்பரே, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...