வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு; destruction of takshashila the world first university


அனைவருக்கும் வணக்கம், உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலாவைப் பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்தப் பதிவை தொடர வேண்டுகிறேன்! தற்போது வரையிலும் எந்த நூற்றாண்டில், யாரால், எப்போது துவங்கப்பட்டது என்று உறுதியிட்டு கூற முடியாத உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலா தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டேக்ஸிலா என்ற நகரில் தோராயமாக கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து (700 BCE) இயங்கி வந்ததாக சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா நண்பர்களே! இன்றைய பதிவில் தக்சசீலா பல்கலைக்கழகம் எப்படி அழிந்து போனது என்பது பற்றிப் பார்ப்போம் வாருங்கள்! 

வேதகாலத்திலிருந்தே தக்சசீலா நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசர்களால் கைபற்றப்பற்று அவர்களது ஆட்சியின் கீழ் இருந்து வந்திருக்கிறது! தக்சசீலா பல்கலைகழகத்தின் அழிவும், இப்பகுதி மக்களான காந்தர்வர்களின் அழிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால், நாம் தக்சசீலா பல்கலைகழகத்தின் அழிவை பற்றி தெரிந்துகொள்ளும் போது காந்தர்வர்களின் அழிவை பற்றியும் காந்தாரக் கலையின் அழிவைப்பற்றியும் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகிறது! இதிகாச ஆதாரங்களின் படி காந்தர்வர்களை முதன் முதலாக தாக்கியவர் பரதன் (இராமனின் தம்பி) என்றே அறியப்படுகிறார்! போரில் வென்ற பரதன் தனக்கென அந்த இடத்தில் தக்சசீலா என்ற அரசாங்கத்தை (Kingdom of Takshasila) ஏற்படுத்தினார்! இதற்க்கு பிறகும் கூட காந்தர்வர்கள் அவ்வப்போது மீண்டு., அரியாசனத்தை கைப்பற்றி தங்கள் நாட்டை தாங்களே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்! இதனை இந்துக்களின் மற்றொரு இதிகாசமான மகாபாரதத்தின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம்!

மகாபாரதத்தின் உச்சகட்டமாக கருதப்படும் குருச்சேத்திர போர் (Kurukshetra War) ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான சகுனி (Shakuni) காந்தாரா நாட்டு இளவரசர் என்பது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது! இவர் காந்தார நாட்டு மன்னனான சுபலாவின் (King Subalaa) மைந்தன் என்பதோடு மட்டுமல்லாமல் குருவம்சத்தை சேர்ந்த அஸ்தினாபுர (Hastinapura; modern day Hastinapur, Utter Pradesh) அரசரான திருதிராஷ்டிரனின் (Dhritarashtra) மனைவி காந்தாரியின் (Gandhari) உடன் பிறந்த சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது! காந்தாரிக்கும் திருதிராஷ்டிரனுக்கும் பிறந்த நூறு மகன்களே கெளரவர்கள் (Kauravas) என்று அழைக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்!


கிட்டத்தட்ட ஒரு மில்லேனியம் ஆண்டுகளுக்கு (1000 BCE) முன்பு தொடங்கிய இந்த கந்தர்வ இந்துக்களின் பாரம்பரியம் பாகிஸ்தானின் தற்போதைய டேக்ஸிலாவில் கிட்டத்தட்ட கி.பி. பதினோராம் நூற்றாண்டு (1100 AD) வரை நீடித்து பிழைத்திருந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே! உண்மைதான், கஜனவித் பேரரசரான (Ghaznavid Empire (Modern day: Ghazni province, Afghanistan), 936 AD – 1187) முகம்மது கஜினி (Mahmud of Ghazni, 971 AD – 1030 AD) இப்பகுதிகளின் மீது படையெடுத்து தாக்கும் வரையில் இப்பகுதியில் காந்தர்வம் என்பது முற்றிலும் அழிந்துபோய்விடவில்லை, இவரது தாக்குதலுக்கு பின்புதான் இப்பகுதியில் காந்தர்வமும், காந்தாராக் கலையும் முற்றிலும் அழிந்துபோய் இப்பகுதியில் இஸ்லாம் அதிக அளவில் பரவ ஆரம்பித்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்!

காந்தர்வ இனமும் காந்தாரா கலையும் முற்றிலும் அழிந்துபோனது கஜினியால் தான் என்றாலும் காந்தர்வர்களின் அழிவின் துவக்கம் கஜினியால் ஏற்பட்டது அல்ல!  நான் முன்பே சொன்னது போல் வரலாற்றில் தக்சசீலா பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களின் பிடியில் இருந்திருக்கிறது! இந்தியர்களை தவிர்த்து இப்பகுதியை அந்நியர் ஒருவர் முதன்முதலாக கைப்பற்றினார் என்றால் அவர் டாரியஸ் தி கிரேட் (Darius the Great, 550 BCE – 486 BCE) என்று தான் சொல்ல வேண்டும்! எக்பாட்டனாவை (Ecbatana; Modern day Hamadan, Iran) தலைநகராக கொண்டு சைரஸ் தி கிரேட் (Cyrus the Great, 559 BCE – 529 BCE) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட பெர்சியவின் முதல் பேரரசான அகய்மேனித் பேரரசின் (Achaemenid Empire, 550 BCE – 336 BCE) மூன்றாவது அரசர் டாரியஸ் தி கிரேட் என்பது குறிப்பிடத்தக்கது! கி.மு.518 (518 BCE) ஆண்டு தக்சசீலா பகுதி இவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தது! இப்பகுதியில் இவர் ஏற்படுத்திய சேதம் அளவிடற்கரியது என்கிறது வரலாறு!


மசிடோனிய  பேரரசரான (King of Macedonia, Greece) அலெக்ஸாண்டர் (Alexander the Great, 356 BCE – 323 BCE) பெர்சியாவை கைபற்ற முயன்றபோது ஏற்பட்ட போரில் கி.மு.334 ஆம் அண்டு அகய்மேனித் பேரரசு தோல்வியுற்று அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தது! இருந்தாலும் கூட அப்போது அகய்மேனித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த தக்சசீலா அலெக்ஸாண்டரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடவில்லை! அந்த காலகட்டத்தில் தக்சசீலாவின் அரசனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அம்பிக் (Ambhik, known as Ambhi) என்பவருடன் கி.மு.326 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் வெற்றிக்கு பின்பே அலெக்ஸாண்டரால் தக்சசீலாவை கைபற்ற முடிந்தது! தனது வெற்றியை குறிப்பிடும் வகையில் தக்சசீலாவிற்கு அலெக்ஸாண்டர் வைத்த பெயரே தக்சசீலாவின் இன்றைய பெயரான டேக்ஸிலா என்பது குறிப்பிடத்தக்கது!


பெர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் போரிட்டு சிதைக்கபட்ட தக்சசீலா மெல்ல மெல்ல தன் பாரம்பரியத்தை இழக்க ஆரம்பித்தது! மேலும் பெர்சியர்கள் மற்றும் கிரேக்கர்கள் தங்கள் நாட்டு பழக்க வழக்கங்களை இப்பகுதி மக்களிடையே கட்டாயமாக புகுத்தியதால் எஞ்சியிருந்த காந்தர்வர்கள் தங்களது சொந்த அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தனர்! இந்த காலகட்டத்தில் தான் சந்திர குப்த மெளரியர் (Chandragupta Maurya, 340 BCE – 298 BCE) சாணக்கியரின் உதவியுடன் பாடலிபுத்ராவை (Pataliputra; Modern day Patna) தலைநகராக கொண்டு மெளரிய பேரரசை (Maurya Empire, 322 BCE – 185 BCE) ஏற்படுத்தினார்! தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆளுகை எல்லையை விரிவுபடுத்தவும் ஆரம்பித்தார்!


மெளரியப்பேரரசின் மூன்றாவது அரசரும் சந்திர குப்த மெளரியரின் பேரனுமான அசோகரது (Ashoka the Great, 304 BCE – 232 BCE) ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், பூடான், நேபாளம் மற்றும் தெற்கில் இலங்கை வரை மெளரியர்களின் ஆட்சி எல்லை விரிந்திருந்தது! இந்தியாவின் பொற்காலமாக கருதப்படும் மெளரியர்களின் ஆட்சிக்காலத்தில் தான் இந்தியா முதன் முதலாக ஒருங்கினைந்து ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! (சேர, சோழ, பாண்டிய அரசை தவிர்த்து; அந்நாளில் இவை மெளரியர்களின் நட்பு தேசமாக இருந்தது). இரண்டு தலைமுறைகளாக மெளரியர்களால் வெல்ல முடியாத நாடாக இருந்த கலிங்கத்தை (Kalinga; Modern day Orissa) கைபற்ற ஏற்பட்ட கலிங்க போருக்கு (Kalinga War) பிறகுதான் அசோகர் புத்த மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது!

அசோகரது ஆட்சிக்காலத்தில் அசோகரது உந்துதலின் பேரில் தக்சசீலா பல்கலைகழகம் புத்தமத கருத்துகளை பரப்பும் முக்கிய ஸ்தளமாக உருமாற்றம் பெற்றது! அதோடு அசோகர் புத்தமத கருத்துக்களை பரப்பும் வகையில் பல்வேறு மடாலயங்களை ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்தினார்! பின்னர் புத்த மதம் இப்பகுதியில் படிப்படியாக வளர ஆரம்பித்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் மாமியன் பள்ளத்தாக்குகளில் உள்ள மலைகளை குடைந்து இரண்டு மிகப்பெரிய புத்தர் சிலைகளை நிறுவும் அளவிற்கு வளர்ந்தது! பாமியன் புத்தர் சிலைகள் (Buddha’s of Bamiyan, built in 500 AD) என்று அழைக்கப்பட்ட இந்த இரட்டை புத்தர் சிலைகள் தான் காந்தாராக் கலையின் பெருமைகளை 2001 ஆம் ஆண்டுவரை உலகிற்கு பறைசாற்றிகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! பின்னர் இது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாலிபான்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அழிக்கப்பட்டது!


அசோகருக்கு பிறகு மெளரியப்பேரரசில் வலிமை பொருந்திய அரசர் யாரும் உருவாகாததால் மெளரியப்பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது! தொடர்ந்து பல்வேறு அரசாங்கங்கள் தக்சசீலாவை தாக்கி கைபற்ற முனைந்தன! இறுதியாக மத்திய ஆசியாவை (Central Asia) சேர்ந்த ஹெப்தாலிட் (Hephthalite) என்ற நாடோடி இன மக்களால் கி.பி.460 (460 AD) ஆம் ஆண்டு தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது! இவர்களது தாக்குதலில் தான் தக்சசீலா பல்கலைக்கழகம் மோசமாக சிதைவுற்று மீண்டும் உருப்பெற முடியாத அளவிற்கு முற்றிலும் அழிக்கப்பட்டது! ஹெப்தாலிட் இன மக்களை பற்றி வரலாற்றில் பல்வேறு குழப்பமான தகவல்கள் நிலவுகின்றன! இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்பதில் தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்ட தெளிவான தகவல் இல்லை என்று தான் கூற வேண்டும்!

தக்சசீலா பல்கலைகழகத்தின் அழிவு ஒரு சில ஆண்டுகளில் நிகழ்ந்தது அல்ல! பல்வேறு அரசர்களின் பிடியில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுற்றே இறுதியாக கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் முற்றிலும் அழிக்கப்பட்டது! தக்சசீலாவின் அழிவை பற்றி அறிந்துகொள்ள தக்சசீலா கண்டத்தை யார் யார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பது பற்றி தெரிந்துகொள்ளுதல் அவசியமானது! இதன் காரணமாக பல்வேறு அரசர்களின் காலத்தை நோக்கி பயணித்தது தவிர்க்க இயலாமல் போனது! தக்சசீலா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டுவிட்டாலும் கூட, இப்பகுதியில் பிறந்த காந்தாரக்கலையும் காந்தர்வமும் கிட்டத்தட்ட பதினோராம் நூற்றாண்டு வரை தப்பி பிழைத்தேயிருந்தது! முகம்மது கஜினி இப்பகுதிகளின் (1100 AD) மீது தாக்குதல் நடத்திய பிறகுதான் காந்தாரக்கலையும் காந்தர்வமும் முற்றிலும் அழிய ஆரம்பித்து  இப்போது எழுத்துக்களில் மட்டுமே எஞ்சியிருக்கிறது! வருங்காலத்தில் இனி எழுத்துக்களிலும் இல்லாமல் போகலாம்!

பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே! உங்களது கருத்துக்கள் எனது தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை வளர்த்துக்கொள்ளவும் உதவும்! விரைவில் மற்றுமொறு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்... நன்றி.. வணக்கம்!!!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

126 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி நன்றி நன்றி!

      மூன்றாவது ஓட்டாக போட்டதினால் மூன்று நன்றிகள் :)

      நீக்கு
  3. கேள்விப்படாத தகவல்கள் வரலாற்றுச்சுவடுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.பகிர்தலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  4. மிகவும் அருமையான அறிந்திராத தகவல்களை சிறப்பாக கோர்த்து தக்ச சீலாவை விளக்கிய விதம் அருமை! ஒரு நாட்டை சீரழிக்க அங்குள்ள நூலகத்தினை அழிக்க வேண்டும் என்று சொல்வார்கள்! அது போல பல்வேறு படைஎடுப்புகளில் இந்த பல்கலைக்கழகம் அழிந்து போனது சோகமான வரலாறு! சுவையான பதிவு வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  5. தக்சசீலா பல்கலைகழகம் பற்றி விரிவான ஒரு வரலாற்று கட்டுரை உங்கள் உழைப்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல!

      நீக்கு
  6. "மகாபாரதம், ராமாயணம் எல்லாம் புராண கதைகள் மட்டுமே" என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த இடுகை உண்மை வரலாற்றிற்கும், புராண கதைகளுக்கும் சம்பத்தம் இருப்பதாக காட்டுகிறதே?

    ஆனாலும் நல்ல ஒரு வரலாற்று பேரழிவை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாபாரதமும், இராமாயணமும் உண்மையில் நிகழ்ந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளது நண்பரே!

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  8. அலெக்ஸாண்டர் அம்பியை வென்றதிலிருந்து பல சம்பவங்கள் அறிந்தவை என்றாலும் காந்தாரக் கலையைப் பற்றியும் அது எத்தனை காலஙகள் வாழ்ந்திருக்கிறது என்பதையும் அறிந்ததில் பிரமிப்பு. மிகுந்த உழைப்புடன் நல்லதொரு கட்டுரையை வழங்கிய உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். (த.ம.7) ஹா... ஹா... நாங்களும் போடுவோம்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்!

      //நாங்களும் போடுவோம்ல///

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

      நீக்கு
  9. அருமையான தகவல்கள்... மிகமிக நன்று.

    பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் ஜீ!

      நீக்கு
  10. அறியாத பல தகவல்கள்...
    இவ்வளவு விளக்கமாக சொன்னதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
    நன்றி...

    (த.ம. 8)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  11. உங்களின் தளத்தின் பெயருக்கு ஏற்றார் போல் வரலாற்றை பற்றி அருமையாக சொன்னிர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு!

      நீக்கு
  12. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  13. ஆரம்ப வரலாறை அருமையான மொழி நடையில் தந்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதி!

      நீக்கு
  14. மிகவும் விரிவான பகிர்வு.
    புதிய பல வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  15. தளத்தின் பெயருக்கு ஏற்றபடி பதிவுகள் இடுவது தான் உங்கள் சிறப்பு தொடருங்கள் இப்பணியை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  16. தக்சசீலா அழிவை பற்றிய அறியாத பல தகவல்களை தெரிந்து கொள்ள உங்கள் பதிவு அருமை தம்பி..பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!

      நீக்கு
  17. ஒவ்வொரு தகவலும் ஆணி அடித்தார் போல் ஆழமாக பதியப்பட்டுள்ளது... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  18. ஒரு பல்கலைக் கழகமே அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது மனது கனமாகிறது.நிறைய வரலாற்று சான்றுகளும் பொக்கிஷங்களும் கூட அழிக்கப்பட்டிருக்கும்...

    பதிலளிநீக்கு
  19. மிக துல்லியமான தகவல்கள்... உங்கள் பதிவுகளில் இது ஒரு மைல்கல் நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்!

      நீக்கு
  20. சகுனி கஜினி....ஹா...எல்லாமே சிவகுமார் குடும்பத்துப் பெயராவே வருகுது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி ஹி! அட இவங்களையெல்லாம் சிவகுமார் பேமிலின்னு முடிவே பண்ணிடீங்களா?

      நீக்கு
  21. அழகான விளக்கமான அழிந்து போன தகவல்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குருவியாரே!

      நீக்கு
  22. நல்ல பதிவு. இது போல் வரலாற்று பதிவுகளை தமிழில் எழுதுபவர்களே குறைவு. வாழ்த்துக்கள்.
    ஆனால் நிறைய தவறுகள் உள்ளது.
    உதாரணம்
    கி.மு 518ம் ஆண்டு ஆண்ட டாரியஸ் ஆட்சி காலத்தில் இஸ்லாம் அங்கு பரவி இறுக்க வழியே இல்லை.முகமது நபி பிறந்ததே கி.பி.570ல் தான்.
    அதாவது நீங்கள் குறிப்பிடும் காலத்தை விட 1000 ஆண்டுக்கு பின்.

    1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கந்தர்வ இந்துக்கள்? 1 மில்லியன் என்பது 10 லட்சம் ஆண்டுகள். சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியதே சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தான்.

    வரலாற்று பதிவுகளை எழுதும் போது தகவல்களை துள்ளியமாக ஆராய்ந்து எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஸ்ட் செய்வதற்கு முன்பு செய்த சில திருத்தங்களில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது இதற்க்காக மிகவும் வருந்துகிறேன்! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!

      டாரிஸ் என்பதிற்கு பதில் கஜினி ஆட்சிக்காலத்தில் என்பதே சரி! மாற்றிவிடுகிறேன்!

      காந்தர்வ இந்துக்கள் குறித்து எழுதியதில் தவறில்லை என்று கருதுகிறேன்! சில விக்கிபீடியா கட்டுரைகளில் அவர்களின் காலம் அப்படித்த்தான் குறிப்பிடபட்டிருந்தது உதாரணத்திற்கு: http://en.wikipedia.org/wiki/Gandhara

      ஒரு வேலை என் புரிதலில் தவறு இருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டவும்! வருகைக்கும் கருத்துக்கும், தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
    2. நன்றி. சார்வாகன் மில்லினியா மற்றும் மில்லியன் பற்றிய வேறுபாட்டை கூறியிருக்கிறார். தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று பின்னூட்டம் இடவில்லை. பதிவு திருத்தபட்டு இன்னும் செம்மையாக வேண்டும் என்பதற்காக தான் தவறை சுட்டி காட்டி இருந்தேன். இது போன்ற வரலாற்று கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்.

      நீக்கு
    3. தவறு இருந்தால் தயக்கம் வேண்டாம் நண்பர்களே சுட்டிக்காட்ட! நானும் மனிதன் தானே சில நேரங்களில் புரிந்துகொள்தலில் தவறு நிகழக்கூடும் அதை சுட்டிக்காட்டினால் சந்தோசப்படும் முதல் மனிதன் நானாகத்தான் இருக்கக்கூடும்! என்னை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தவறான தகவல் போய் சேர்ந்துவிடக்கூடது என்பதில் மிகுந்த அக்கறை எனக்கு உண்டு! மிக்க நன்றி சதுக்க பூதம்!

      நீக்கு
  23. வரலாறு சுவடுகள்போல்பிளாக்கர் பதிவுகளில் உங்களின் பதிவுகளும் நீங்கா இடம்பிடிக்கும். அருமையான தகவல்கள்.உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பரே....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி வேலன்! தொடர்ந்து வருகை தாருங்கள்!

      நீக்கு
  24. தக்சசீலாவைப்பற்றி இவ்வளவு தகவல்களா! என ஆச்சரியப்படவைக்கும் அளவுக்கு அருமையான பதிவு. இரட்டை புத்தர் சிலையை அழித்தது பழமையின் பெருமையை உணராத பதர்களின் வேலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      நீக்கு
  25. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோ
    அருமையான பதிவு.வரலாற்றை ஆவணப்படுத்தல் என்பது இன்றியமையா.கடினமான பணி செய்வதற்கு வாழ்த்துக்கள். எனினும் ஒரு சிறு தவறு ஏற்கெனவே சகோ ச.பூதம் சுட்ட்டிக் காட்டியது.
    மில்லெனியம் என்றால் 1000 வருடங்கள் ,முதல் மில்லேனியம் என்றால் பொ.ஆ.மு(கி.மு!) 1000 , மில்லியன் என்றால் 10 இலட்சம்.

    http://en.wikipedia.org/wiki/Gandhara
    /The Kingdom of Gandhara lasted from the early 1st millennium BC to the 11th century AD. It attained its height from the 1st century to the 5th century under the Buddhist Kushan Kings/
    http://en.wikipedia.org/wiki/Millennium
    A millennium (plural millennia or millenniums) is a period of time equal to one thousand years. It derives from the Latin mille, thousand, and annus, year. It is often, but not necessarily, related to a particular dating system.
    .
    அருமையான் ஆவ‌ண‌ப் பதிவில் சிறு குறை என்ப‌தால் ம‌ட்டுமே சுட்டுகிறேன். புரிந்து கொள்வீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.
    10 இல‌ட்ச‌ம் ஆண்டுக‌ள் முன் இப்போதைய‌ மனித இனம் ஹோமோ சேஃபிய‌ன்க‌ளே கிடையாது.
    ந‌ன்றி ச‌கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்வாகன்! சற்று குழம்பி போயிருந்தேன்! அருமையான விளக்கம் தந்து புரிய வைத்தீர்கள்! குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி சகோ! இதோ விரைந்து திருத்துகிறேன்!

      எப்போதும் தவறுகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே! தொடர்ந்து என்னை ஆதரியுங்கள்! அன்பிற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  27. முதல் பகுதின் தொடர்ச்சி ம்

    வரலாறு அழிந்து போன வரலாற்றை சொன்ன விதம் அருமை - தெரிந்துகொண்டேன்

    உங்களின் தேடல் தொடரட்டும் அப்ப தானே நாங்க பல வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக தொடரும் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  28. பதிவுக்கு மிக நன்றி நண்பா
    காந்தாரக்கலை என்றால் என்ன ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தாரா நாட்டு சிற்பிகளும், கிரேக்க நாட்டு சிற்பிகளும் இணைந்து உருவாக்கிய சிற்பக்கலையே காந்தாரக்கலை!

      நீக்கு
  29. இது வரை அறிந்து கொள்ளாத தகவல் தந்தமைக்கு நன்றி வரலாற்று சுவடுகள்.
    இன்று வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு என் பாராட்டுக்கள்.

    (லீவு என்றால் துர்ங்கிக்கொண்டே இருக்க வேண்டுமா... சீக்கரமாக எழுந்து இந்த மாதிரி நல்ல நல்ல தகவல்களை சேகரித்து பதிவிட்டால் தானே என்னைப் போன்றவர்கள் பழைய வரலாற்றை அறிய முடியும்.... சரிசரி... காப்பி ஏதாவது குடித்துவிட்டு புதிய தகவலைப் போடுங்கள் நட்பே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லீவு என்றால் தூங்கிகொண்டே இருக்க வேண்டுமா//

      ஹி ஹி அப்பிடியே பழகிருச்சு...என்ன செய்ய..ஆண்களுக்கே உள்ள இயற்கை பிறவி குணம் ஹி ஹி ஹி!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  30. காலம் தாழ்ந்து வந்தமைக்கு வருந்துகிறேன்... இணையம் சரிவர வேலை செய்வது இல்லை....

    வராற்று நிகழ்வுகள் எழுதுவதற்கு எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது அதிகமான ஆராய்ச்சி வேண்டும் என்பதற்கு உங்கள் கட்டுரை ஒன்றே சாட்சி... இராமாயண, மகாபாரதம் வரை தொடர்ந்து பின் அழிக்கப்பட்டு கஜினியால் முழுவதும் அழிய காரணமாயிற்று என்று ஆராய நிச்சயமாக தனித் திறமை வேண்டும் நண்பா....

    சம்பவங்களின் கோர்வை அலுக்காத வண்ணம் இருக்கிறது... தொடர்ந்து ஆரய்ச்சி செய்யுங்கள் சுவடுகளை அறிய ஆர்வமாய் உள்ளோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனு!

      நீக்கு
  31. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!

      நீக்கு
  32. வரலாற்று புத்தகத்தை திருப்பிப் படித்த உணர்வு. இரண்டுமே மிக அருமையான கட்டுரைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரபு!

      நீக்கு
  33. உங்கள் அபார உழைப்பு தேடல் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  34. நண்பரே, சிறிது கருத்து மாறுபாட்டிற்காக வருந்துகிறேன்!!

    புதிய அரசுகள் நாட்டைக் கைப்பற்றிய போது, அந்த அரசுகளின் கலாசாரங்கள் பழைய நிலையுடன் கலந்திருக்கிறது. இதன் காரணமாக, ஒரு பாரம்பரிய கலவை நடந்திருக்கிறதே (Fusion) தவிர அழிவு கிடையாது!!

    ஏனெனில், குப்தர்களின் ஆட்சிகாலத்தில் தான் நாளந்தா மற்றும் தட்சசீலா பல்கலைக்கழகங்கள் செழித்தன. அதன் பிறகு, குஷனர்களின் ஆட்சிக்காலத்தில் தான் காந்தாரக்கலை தனது புதிய பரிணாமத்தை அடைந்தது. ( கி.பி 30 - 230)

    இவற்றை அழிவின் காரணியாக சொல்ல முடியாது!!

    மற்றபடி, பல்கலைக்கழகம் அழிந்ததற்குக் காரணம் ஹெப்தாலிட் (Hephthalite) என்ற இனமே (கிபி 499 ஆம் ஆண்டு).

    //சோவியத்யூனியனை சேர்ந்த ஹெப்தாலிட் (Hephthalite) //
    அவர்கள் ஈரான்/ துருக்கியினைச் சேர்ந்தவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்!

    //பாமியன் புத்தர் சிலைகள் (Buddha’s of Bamiyan, built in 500 AD) என்று அழைக்கப்பட்ட இந்த இரட்டை புத்தர் சிலைகள் தான் காந்தாராக் கலையின் பெருமைகளை 2001 ஆம் ஆண்டுவரை உலகிற்கு பறைசாற்றிகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! பின்னர் இது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாலிபான்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அழிக்கப்பட்டது!//

    அவற்றினை மீண்டும் நிறுவ முயற்சிகள் நடை பெறுகிறன.

    ஒன்று மட்டும் புரிகிறது..
    அன்றும் சரி, இன்றும் சரி அரசுகளின் மாற்றத்தால் கல்வி மாறிக்கொண்டே இருந்திருக்கிறது!! ஒவ்வொரு அரசன் மாறும் போதும் பல்கலைக்கழகமும் மாறியிருக்கிறது. (பொதுவாத் தான் சொன்னேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நேரம் செலவழித்து மிகப்பெரிய கருத்துரையை பதிவு செய்தமைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!

      ம்ம்ம்ம்...நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

      காந்தாரக் கலை நீங்கள் குறிப்பிட்ட காலங்களில் தான் உச்சம் பெற்றது மறுப்பதற்கில்லை! ஆனால் காந்தர்வ இன மக்களின் அழிவு டாரியஸ் இப்பகுதியை கைபற்றியதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது!

      ஹெப்தாலிட் இன மக்களை பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது! இதை பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்! விக்கிப்பீடியாவில் தட்டி தேடினால் தஜிகிஸ்தான் வரலாறு வருகிறது கவனித்தீர்களா?

      பாமியன் புத்தர் சிலைகலை மறு சீரமைக்க ஜப்பான் பெரும் முயற்சி செய்து வருவதை அறிந்தேன்! அதன் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி எனக்கு தெரியவில்லை!

      ஒரு இடுகையை எழுதும் போது என்னால் முடிந்த அளவு நிறைய விசயங்களை தொகுத்து சொல்ல வரும் விசயத்தில் முற்றிலும் தெளிவு பெற முயற்சிப்பேன்! இந்த இடுகையை பொருத்தவரை சற்று அசால்டாக இருந்துவிட்டேன் நிறைய விசயங்களில் தெளிவு பெற்றுக் கொள்ளவில்லை அது எத்தனை பெரிய தவறு என்று இப்போது தெரிகிறது!

      இந்த இடுகையை மிக விரிவாக எழுதியிருந்தால் அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் தோற்றம் மற்றும் பரவல் பற்றி இருந்திருக்கும்! இப்பதிவை எழுதும் போது அதை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும் என்பதும் என் எண்ணமாக இருந்தது!

      நீக்கு
  35. :(........அறியாத தகவல்கள் அத்தனையும்.மிக்க நன்றி தலைவா இந்த பதிவிற்காய்.

    எனக்கொரு பதில்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  36. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  37. இப்படியான சரித்திரத் தகவல்களைத் தேடித்தருவதென்பது சுலபமல்ல.வாழ்த்துகள் சகோதரா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  38. தக்கசீலம் – சிறுவயதில் பள்ளி பருவத்தில் பாடமாக வந்தது. சாணக்கியன் சபதம், விஷ்ணு சர்மாவின் பஞ்ச தந்திரக் கதைகள் – இவைகளை மறக்க முடியுமா? தக்கசீலம் பல்கலைக் கழகம் பற்றிய விரிவான முந்தைய பதிவையும் படித்தேன். இரண்டு பதிவுகளுமே அலுப்பு தட்டவில்லை. வரலாற்றில் ஒன்றின் வீழ்ச்சியும் மற்றொன்றின் எழுச்சியும்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///வரலாற்றில் ஒன்றின் வீழ்ச்சியும் மற்றொன்றின் எழுச்சியும் தான் வரலாற்றை உருவாக்குகின்றன///

      உண்மை ஐயா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  39. நண்பருக்கு வாழ்த்துக்கள் அழகிய நடையில் அற்புத வரலாற்று சுவடுகளை எங்களுக்கு அடையாளம் காட்டும் உங்களின் பணி சிறப்பிற்குரியது ..........நல்ல முயற்சி ஒரு நூலாக வெளியிட சிரத்தை மேற்கொள்ளுங்கள் நாளைய தலைமுறையின் கையில் எளிய ஏடாக நம் சரித்திரம் வெளிச்சமாகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  40. sirappana pathivu runthaalum ulakileye thamizh natilthaan muthal palkalai kazhakam thondri irunthaththu ulakenkum irunthu thamizhakaththirkku vanthu katru sendra varatru pathivu nammidam undu arul koornthu thedi padikkavum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி.பி எட்டாம் நூற்றாண்டில் (800 AD) தமிழ் நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்கலை கழகம் இருந்ததாய் எங்கோ எப்போதோ கேள்விப்பட்டேன்! உண்மையா என்று கூட தெரியவில்லை! இதுகுறித்து இணையங்களில் தேடிப்பார்த்தேன் போதுமான தகவல்கள்/ஆதாரங்கள் எதுவுமே கிடைக்கவில்லை :( :( :(

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  41. ஆபூர்வமான தகவல்கள்! பெருமிதமும் வருத்தமும் ஏற்படுகிறது! ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

      நீக்கு
  42. இதுவரை அறியாத, பிரமிப்பையும் ஆச்சர்யமும் தந்த கட்டுரை..

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    பதிலளிநீக்கு
  44. விரிவான விளக்கத்துடன் கூடிய சிறந்த பதிவாக்கம். அலெக்சாண்டர் ஓவியம் ஒன்றும் வெளியிட்டு இருக்கிறீர்கள்
    அந்த ஓவியத்தின் சிறப்பம்சம் அவர் வாழ்ந்த காலகட்டதில் டாரியஸ் போரில் வெற்றி பெற்றதை சிறப்பிக்க வரையப்பட்டதாக இருக்கலாம் இதன் காலம் 330 BC என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஓவியர் எரித்தீரியா வைச் சேர்ந்த ஃபிலோஸெனஸ் வரைந்தது அந்த குதிரையின் பெயர் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
    டெக்ஸிலா அலெக்ஸாண்டிரியாவின் நேரடி ஆளுகைக்குள் இருந்தது. எழுத்துக்களில் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனும் உங்களின் வருத்தம் தோய்ந்த எழுத்துக்களில் அழிந்து போன அந்த நாகரீகத்தின் பெருமையை உணரச்செய்கிறது. தமிழினத்தின் எகிப்துவரைக்குமான சுவடுகளும் இது போன்றே அழிக்கப்பட்டு மண்மூடிப்போய்விட்டது. அழித்தவர்களின் கண்டுபிடிப்பாக பறைசாற்றப்பட்டது வரலாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பப்பா...இந்த தகவல்கள் எல்லாம் எங்கிருந்து தங்களுக்கு கிடைக்கின்றது?

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமரன் சார்!

      நீக்கு
  45. தொடர்ச்சியையும் வாசித்து மலைத்துப் போனேன். எத்தனை விவரங்கள்! இது போன்ற ஒவ்வொரு பதிவின் பின்னணியில் இருக்கும் உங்கள் உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன். ஒரு காலத்தில் கோலோச்சியிருந்த ஒரு பல்கலைக்கழகம் காலமாற்றத்தால் சிதைந்து போன வரலாறை மிகத் தெளிவாகவும் அருமையாகவும் தொகுத்துப் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள் வரலாற்று சுவடுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்!

      நீக்கு
  46. அரிதான தகவல்கள். இந்த பதிவின் பின்னால் உங்களின் உழைப்பு தெரிகிறது. எழுதுவது ஏற்கனவே பதியப் பட்ட வரலாறு என்பதால், கவனமாக கையாண்டிருப்பதும் தெரிகிறது. முதன்முறையாக உங்கள் வலைதளத்திற்கு வருகிறேன்.

    உங்களை தொடர்கிறேன்.(அதாங்க ஃபாலோயர் ஆகிவிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், பின்தொடர்பிர்க்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து வருகைபுரிந்து வாசித்து வந்தால் மிக்க நன்றி!

      நீக்கு
  47. இது வரை அறியாத் தகவல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  48. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. வை.கோ ஐயாவிடம் இருந்து இரண்டாம் முறையாக விருது பெற்றதை நானும் மிக மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன்!

      வாழ்த்துக்கு நன்றி சகோ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  49. அருமையான பதிவு! அது சரி அது என்ன வைகோ விருது? புரியலியே? ஆனாலும் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருது வழங்கியவர் பெயர் அது, விருதின் பெயரல்ல!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  50. Congratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் சகோ!

      நீக்கு
  51. எங்கும் நான் அறிந்திராத தகவல்கள் மொத்தமும் இங்கு உள்ளது ...
    இப்போதுதான் இதை பற்றி அறிந்து கொள்கிறேன் ...
    எப்போதும் உங்களின் இந்த சேவை தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

  52. அன்பரே உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
    அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்


    http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் சகோ! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  53. விருது ஒன்றை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன் என் தளத்தில் அதை பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்
    http://kovaimusaraladevi.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதுக்கு நன்றி சகோ, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  54. அருமையான தகவல்களை மட்டும் அல்ல மிகவும்
    நேர்த்தியாக ஆக்கங்களை எழுதி வெளியிட்டு கருத்தும்
    பகிரும் விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று .வாழ்த்துக்கள்
    மென்மேலும் சிறப்புற!!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  55. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  56. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      நீக்கு
  57. சுவாரஸ்யம். அறியாத பல தகவல்களை அறியத் தந்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  58. இந்தியனின் பழம் பெருமை தெரியும் போது மிகவும் பெருமையா இருக்கு ஆனா இன்றைய நிலைமையில் (இனம் புரியாத)மனசெல்லாம் வலிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பல பெருமைகளை அறியத்தரவிருக்கிறேன், தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பரே!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  59. பதில்கள்
    1. வருகைக்கும்..வாசிப்பிற்கும்..கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  60. வரலாட்ட்றுப் பதிவு அருமை.புதுதகள்கள் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.!

      நீக்கு
  61. வணக்கம்

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/05/Bladepedia-In-Valaicharam-04.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...